Sunday, June 30

ஆசியாவிலேயே இலங்கையில்தான் மின்சார கட்டணம் அதிகம்- Proud to be a Sri Lankan


இலங்கையானது ஒரு கிலோவாற் மின்கட்டணத்திற்கு 0.37 டொலர்களை அறவீடு செய்வதால், ஆசியாவில் மின்சாரக் கட்டணம் மிகவும் அதிகரித்துள்ள நாடுகளில் இலங்கைம் ஒன்றாகக் காணப்படுகின்றது. 

இலங்கையில்  பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் மூன்றில் இரண்டு பகுதியானது நிலக்கரி அல்லது எரிபொருளைப் பயன்படுத்திப் பெறப்படுகிறது. வறட்சி நிலவும் காலங்களில் நீரிலிருந்து மின்சக்தியைப் பெறமுடியாது. 
2013ல் மின்சார உற்பத்தியில் 750 மில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் மே மாதத்திலிருந்து வரிவீதம் அதிகரிப்பதால் மின்சாரக் கட்டணத்தில் 225 மில்லியன் டொலர்கள் மேலதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை  மின்சார சபை தெரிவித்துள்ளது.

'முஸ்லிம் பெண்கள் நிகாப் அணியலாம் - வங்கிகள்' - ஞானசார தேரரின் முகமூடி கிழிந்தது


நிகாப் - முஸ்லிம் பெண்களில் சொற்ப தொகையினரால் அணியப்படுகின்ற ஓர் முகத்திரையாகும். பொது பல சேனா முஸ்லிம் சமூகத்தை எதிர்க்கின்ற போதெல்லாம் அடிக்கடி விமர்சனத்திற்குட்படுவது இந்த நிகாப் விடயம்தான்;. கடந்த வாரம் (ஜுன் 17) பதுளை நகரில் இடம்பெற்ற பொது பல சேனா கூட்டத்தின் போது, பொது பல சேனாவின் சர்ச்சைக்குரிய பொதுச் செயலாளர் 'கலகொடத்தே ஞானசார தேரர், (இவர் அரலிய பிளேஸ், தலஹேனா வில் அமையப்பெற்றுள்ள கிறிஸ்தவ கோயில் தாக்குதலுடன் தொடர்புபட்ட சுமார் 11 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்) மீண்டும் நிகாபை தடை செய்யக்கோரி உள்நாட்டு வங்கிகளின் சார்பில் அழைப்பு விடுத்தார்.

ஞானசார தேரர் கூட்டத்தில் பேசுகையில், சில உள்நாட்டு வங்கிகள் தன்னோடு தொடர்பு கொண்டு நிகாப் அணிந்து வருகின்ற வாடிக்கையாளுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதில் பாரிய பிரட்சினைகளை எதிர்கொள்வதாகவும், இவை வங்கிகளுக்கு பெரும் இடையுறாகவும் இருக்கிறது என்று தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது. 'நிகாப் அல்லது புர்கா அணிகின்ற பெண்கள் வங்கிக்குச் சென்று, வங்கிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகையில் அவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு வினவப்படும் போது, வங்கி உத்தியோகத்தர் முகம் திரையிடப்பட்டிருக்கின்ற பெண்ணின் அடையாளத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடியாதுள்ளது' என்று ஞானசார தேரர் குறிப்பிட்டார். 'குறித்த பெண்ணிடம் முகத்தை காண்பிக்குமாறு வேண்டப்படுகையில் அவள்  மறுத்துவிடுகிறாள். இவ்வாறிருக்கையில் ஆடைக்குள் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று நாம் எவ்வாறு அறிந்து கொள்வது.?'

புத்தசாசன அமைச்சினால் மத மாற்றங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? - பொதுபல சேனா கேள்வி


புத்தசாசன அமைச்சினால் மத மாற்றங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - பொதுபல சேனா

 
நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள சட்டத்திட்டங்கள் மூலம் பௌத்த மக்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும் சிங்கள் பௌத்த மக்களை ஏமாற்றி நாடு முழுவதும் மிகவும் சூட்சுமான முறையில் செயற்படுத்தப்பட்டு வரும் மதமாற்ற நடவடிக்கைகளை காவற்துறை மா அதிபரின் தலையீட்டின் அடிப்படையில் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
 
புத்தசாசனம் என்ன என்பதை விளக்கி கூற கூட முடியாத, நாட்டின் புத்தசாசன அமைச்சினால், நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், இந்த மத மாற்றங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஹங்வெல்ல, கந்தானை, பேருவளை உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களில் இவ்வாறான மாற்று மதங்களின் ஜெப நிலையங்கள் செயற்பாடுகள் காரணமாக  பல பௌத்த மக்கள் இடையூறுகளுக்கு முகம் கொடுப்பதுடன், ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்த மாற்று மதத்தினர், மக்களின் வறிய நிலைமை பயன்படுத்தி, அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி, மத மாற்றம் செய்து வருகின்றனர். இது தார்மீகத்திற்கு எதிரான தவறு.
 
அடிப்படைவாத சமய அமைப்புகள் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அவை இலங்கையில் மாத்திரம் செயற்பட அனுமதித்திருப்பது மிகவும் கவலைக்குரியது எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது: ஹக்கீம்


hakeem அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அதன்  தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கண்டியில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இனப் பிரச்சினைக்கு தீர்வு காண குறிப்பாக 13ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தை மேற்கொள்ள  அரசாங்கத்தால் இந்த பாராளுமன்ற தெரிவு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்படுகிறது.
அதேவேளை 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகிறது என்று கொள்ள முடியாது என்று முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முண்ணனி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இத் தெரிவுக் குழுவில் பங்கேற்காது என ஏற்கனவே அறிவித்துள்ளமை   குறிப்பிடதக்கது
இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள வடக்கு தேர்தலில் தமது கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாகவும் ஹக்கீம்  மேலும் தெரிவித்தார்.

2014 ஜனாதிபதித் தேர்தல் –ஜோதிடர் ஆலோசனை - அரசியல் களத்தில் பரபரப்பு!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வரும் 2014ம் ஆண்டில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு உத்தேசித்திருப்பதாக நம்பகமான தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது. ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அலரி மாளிகை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014ம் ஆண்டின் இறுதிக்குப் பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஜோதிட ரீதியாக சாதகமான பலன்கள் கிட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அவருக்கு நெருக்கமான ஜோதிடர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனைக் கருத்திற் கொண்டே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தனது பதவிக்காலத்தை மூன்றாவது தவணைக்கு நீட்டித்துக் கொள்ளும் வகையில் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளார். மேலும் இந்தத் தேர்தலின் போது மாகாண சபை முறை ஒழிப்பு, சிறுபான்மை கட்சிகளுக்கு எதிரான புதிய நடைமுறைகள் போன்ற விடயங்களை முன்வைத்து அவர் பெரும்பான்மை சிங்கள மக்களின் அதிகூடிய ஆதரவைப் பெற்று ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொள்ள முனைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் இலங்கை மக்கள் மாகாண சபை முறையை எதிர்ப்பதாகவும், அதனை மாற்றியமைப்பதற்கு தனக்கு சர்வஜன ஆணையை வழங்கியுள்ளதாகவும் சர்வதேசத்திற்கு காட்டிக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருதுவதாக தெரிகிறது. இதற்கிடையே ஜனாதிபதியின் காய் நகர்த்தல்கள் தொடர்பில் நம்பகமான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய முன்னணி போன்றவற்றை இணைத்துக் கொண்டு எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி

நடைபெறவுள்ள வடக்கு, வட மேல் மற்றும் மத்திய ஆகிய  மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் தனித்து போட்டியிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் மேற்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்த கட்சியாக இருந்தாலும் அதன் தனித்துவம் பாதுகாக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இதனால் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதும் வேட்பாளர்களை தெரிவு செய்வதும் கட்சியின் தனித்துவமாகும் என அவர் தெரிவித்தார்.
எனினும் சில நேரங்களில் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பாடலாம் என அமைச்சர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் பெண்களின் புர்கா + நிகாப் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் - முஸம்மிலின் லங்காதீப கட்டுரையிலிருந்து

“இனங்களுக்கிடையில் வேற்றுமையை உண்டுபண்ணக்கூடிய, தேவைக்குதவாத சமூகத்தனித்துவத்தை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தும் ‘’ கோணிபில்லா ” ( புர்கா / நிகாப் ) முறை இந் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளதுடன் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் வீணான சந்தேகங்களை ஏற்படுத்தக் கூட்டியதுமாகும்”. என்று தேசிய விடுதலை முன்னணி ஊடக பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  எம் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
2013/06/30 ந் திகதி லங்காதீப பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ள கட்டுரையொன்றில் மேற்படி கருத்து கூறியுள்ள அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அரசிலிருந்து மு.கா. விலக வேண்டும் என நினைப்பது கோவணத்தை தலைப்பாகையாக அணிவது போன்றது: ஹக்கீம்






அரசிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறவேண்டுமென சிலர் நினைப்பது கோவணத்தைக் கழற்றி தலைப்பாகை சுற்றுவது போன்ற ஒரு செயலாகும் என்று நீதிஅமைச்சர் றவூப் ஹகீம் தெரிவித்தார்.

(30.6.213) இன்று கண்டியில் நடந்த கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது-

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா?


வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் மாவை

வட மாகாண சபைக்கானத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அரசியற் கட்சிகள் தமது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
 
இந் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, கட்சியின் நீண்டகால உறுப்பினரும், சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் இறக்க முயற்சிப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
 
இது தொடர் பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக் கும் இதர கட்சிகள் மத்தியில் கருத்தொருமிப்பு காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்தின் இன்றைய சூழலை கருத்திற்கொண்டு வட க்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதே பொருத்தமானதாக இருக்குமென ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட்; ஆகிய கட்சிகள் தெரிவிக்கின்றன. 
 
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இக்கட்சிகள் தேர்தலுக்குப் பின் னர் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுப வர் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த வகையில் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடியவர் மாவை சேனாதிராஜா என்பதே எமது கருத்தாகும்.
 
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழர சுக் கட்சியைச் சார்ந்த ஒருவரே முதலமைச் சர் வேட்டபாளராக நிறுத்­தப்படுவார். கூட் டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. இந்த நிலையில் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதே பொருத்தமானதாக இருக்குமென ஈ.பி. ஆர். எல். எப் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம். பி.தெரிவித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்வ தற்கு டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்கள் முழு ஆதரவையும் வழங்கும் என்று டெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்தார்.
 
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பா ளர் பல சவால்களுக்கு தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் முகம் கொடுக்க வேண் டிய நிலை ஏற்படும். இந்த சவால்களை சமாளிக்கும் ஆற்றல் மாவை சேனாதிரா ஜாவிடம் இருக்கிறது என்றும் அவர் தெரி வித்தார்.

உங்கள் மீது நம்பிக்கையில்லை: பஷீர் சேகுதாவூத் ஹக்கீமுடன் மோதல்

hakeem and seguநேற்று சனிக்கிழமை இரவு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற அதியுயர்பீட கூட்டத்தில் அதிகளவான உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் கட்சித் தலைவருக்கும் அமைச்சர் பஷீர் சேகுதாவுதுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், முத்தலிப் பாருக், தௌபீக் ஆகியோரும் மாகாணசபை உறுப்பினர்களான ஹாபிஸ் நஸீர், எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.தவம், ஹசன் மௌலவி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை, இக்கூட்டத்தில் பஷீர் சேகுதாவுதுக்கும் ரவூப் ஹக்கீமுக்கும் சுமார் 15 நிமிடங்கள் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கில் ஆளும் கட்சியுடன் சேர்ந்தே முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட வேண்டும். தனித்துப் போட்டியிடுவது என்றால் அரசிலிருந்து விலகவேண்டும் என்ற பஷீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசுடன் இருந்துகொண்டே கல்முனை மாநகரசபை மற்றும் கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதாகவும், அதேபோன்று வடக்கு தேர்தலிலும் அரசுடன் இருந்துகொண்டே தனித்துப் போட்டியிட முடியுமெனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதன்போது ரவூப் ஹக்கீமைப் பார்த்து, உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லாத நிலையில் எப்படி உங்களுடன் இணைந்து பணியாற்றமுடியுமென பஷீர் சேகுதாவூத் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்நிலையில், 13ஆவது திருத்த சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மாகாணசபை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு எழுத்துமூலம் மாகாணசபை உறுப்பினர்களை கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் உயர்பீட உறுப்பினர் கே.எம்.ஏ. ரசாக் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் இணக்கமின்றி வடக்கு, கிழக்கு இணைக்கப்பட மாட்டாது: சுமந்திரன்

Sumanthiran
முஸ்லிம்களின் இணக்கமின்றி ஒருபோதும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட மாட்டாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.
அஸாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணியின் (நுஆ) அம்பாறை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது சீபிரீஸ் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு சுமந்திரன் எம்.பி. உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;
தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய மிக இக்கட்டான கால கட்டத்தில் இரு சிறுபான்மைச் சமூகங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். முஸ்லிம்களுக்கென தனிக்கட்சி இல்லாதிருந்த காலத்தில் தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியே முஸ்லிம்களை அரவணைத்து அவர்களது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தது.

கிழக்கு, மேல் மாகாணங்களில் 13 குறித்த பிரேரணையை கடுமையாக எதிர்ப்போம் - ஹஸன் அலி

13 ஆவது திருத்தச் சட்­டத்தில்  திருத்­தங்­களை  மேற்­கொள்­வ­தற்கு  அங்­கீ­காரம் வழங்கும் வகையில் கிழக்கு  மாகாண சபையில்   பிரே­ரணை  முன்­வைக்­கப்­படும் போது   அதனை சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ்  எதிர்க்கும்.  அத்­துடன் வாக்­கெ­டுப்பின் போது  எமது கட்­சியின் உறுப்­பி­னர்கள்  பிரே­ர­ணைக்கு எதி­ரா­கவே  வாக்­க­ளிப்­பார்கள்  என்று  அக்­கட்­சியின் செய­லா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  எம்.ரீ.ஹசன் அலி  தெரி­வித் தார். 
 
இதேபோல் மேல் மாகா­ண­ச­பையில்  இந்தப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டும்­போதும் எமது உறுப்­பி­னர்கள் அதற்கு எதி­ரா­கவே  வாக்­க­ளிப்­பார்கள். 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் திருத்­தங்­களை  மேற்­கொள்­வ­தற்கு  அனு­ம­திக்க  முடி­யாது என்றும்  அவர்  சுட்­டிக்­காட்­டினார்.
 

கூட்டமைப்பின் விசேட அறிக்கை விரைவில் வெளிவரும்! கூட்டமைப்பின் விசேட அறிக்கை விரைவில் வெளிவரும்!

கூட்டமைப்பின் விசேட அறிக்கை விரைவில் வெளிவரும்!

 
 
 
 
 
 
 
 
 
 
 
13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விவாதிப்பதற்கென அண்மையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்காமை உள்ளிட்ட பல விடயங்கள் அடங்கிய விரிவான அறிக்கை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் வெளியிடவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று (29) மாலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

“டைம்” சஞ்சிகை பிரதிகள் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் முடக்கம்


ஜுலை 1ம் திகதிக்கான டைம் சஞ்சிகை பிரதிகள் இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் விமான நிலையத்தில் முடக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியன்மாரில் பெருகி வரும் பெளத்தவாதம் பற்றிய விபரங்களுடன் வெளிவந்துள்ள மாத இதழ் இலங்கையிலும் தடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது போன்றே தற்போது முடக்கப்பட்டிருப்பினும், சுங்கத் திணைக்கள நிர்வாக இயக்குனர் அனுமதியளித்தால் உரிமையாளரிடம் பொறுப்பளிக்கப்படும் என சுங்கத்திணைக்கள பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்ச பீட கூட்டத்தை அதன் 4 எம்.பி.களும், 4 எம்.பி.சி. களும் பகிஷ்கரிப்பு

 
 
 
 
 
 
 
 
 
13 வது திருத்தச்சட்டமூலம் மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் தொடர்பாக ஆராயும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்ச்பீட கூட்டம் தற்பொழுது இடம்பெற்றது. இந்த அவசர கூட்டத்தில் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிப் பாருக், தௌபீக், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.சீ.பைசால் காசிம் ஆகியோரும், மாகான அமைச்சர்களான ஹாபிஸ் நஸீர், எம்.ஐ.எம்.மன்சூர், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஹசன் மௌலவி ஆகியோரே கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.


இக்கூட்டத்தில், 13 வது திருத்த சட்டமூலத்தை திருத்தும் மசோதா மாகாணசபையில் வரும் பட்சத்தில் அதற்க்கு

எதிராக வாக்களிக்குமாறு எழுத்து மூலம் மு.கா. மாகாணசபை உறுப்பினர்களை கோருவது எனவும், கிழக்கு மாகாணசபையில் இத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மசோதா ஒன்றை முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், உச்சபீட உறுப்பினருமான கே.எம்.ஏ. ரசாக் (ஜவாத்)  தெரிவித்தார்.

Saturday, June 29

13ஆவது அரசியலமைப்பு திருத்தம தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில்லை - TNA


13ஆவது அரசியலமைப்பு திருத்தம தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில்லை -

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கொழும்பில் சந்திப்பு- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றுமாலை 5மணியளவில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், பிரசன்னா, புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் பத்மநாதன் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதன்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக விவாதிப்பதற்கென அண்மையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், மேற்படி தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்வதில்லையென முடிவெடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக விரிவான ஓர் அறிக்கையினை விரைவில் வெளியிடுவதென்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அடுத்தவாரம் கூடிப் பேசுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை  TNA
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவாக கருத முடியாது எனவும், இதனை அரசாங்கத்தின் தெரிவுக்குழுவாகவே கருத வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பகிர்வது குறித்த தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

13 வது திருத்தத்திற்கு எதிரான பேரணி மேற்கொள்ளப்போகும் பௌத்த பிக்குகள்

buddhist monkஇலங்கையின் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை ஒழிக்கக் கோரி ஆயிரக்கணக்கான பெளத்த பிக்குகள் எதிர்வரும் ஜூலை 2 ல் கொழும்பில்பாரிய பேரணியொன்றை நடாத்தவுள்ளனர்.
மகரகமவில் நடைபெறவுள்ள இந்த பேரணியை “மாகாண சபைகள் ஒழிக்கும் தேசிய இயக்கம்” எனும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பேரணிக்கு நாடு முழுவதிலும் இருந்து 3,000-4,000 பௌத்த பிக்குகள் கலந்துகொள்ளவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அஸ்கிரிய மற்றும் மகா சங்க தேரர்களை இதில் கலந்துகொள்ளுமாறு இந்த பேரணியை ஏற்பாடு செய்த குழுவின் உருப்பினர் ராஜவற்ற வப்பா தேரர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன் இந்த 13 வது திருத்தம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று ராஜவற்ற வப்பா தேரர் தெரிவித்துள்ளார்.

13இல் திருத்தம் மேற்கொள்வதற்கான வாக்கெடுப்பை மு.கா. புறக்கணிக்கும்?


slmcசர்ச்சைக்குரிய 13ஆம் திருத்தச் சட்டம்மூலம் குறித்த வாக்கெடுப்புகளை முஸ்லிம் காங்கிரஸ் பகிஷ்கரிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணசபை மற்றும் கிழக்கு மாகாணசபையில் 13இல் திருத்தம் மேற்கொள்வதற்கான வாக்கெடுப்புகளில் முஸ்லிம் காங்கிரஸ் கலந்துகொள்ளாதென நம்பப்படுகிறது.
இத்திருத்தம் குறித்து வடமேல் மாகாணசபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது இரு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததினால் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அவர்களை கட்சித் தலைமை இடைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அரசாங்கத்தை பகைத்துக்கொள்ளாமலும் 13இல் திருத்தம் செய்வதற்கு ஆதரவளிக்காமலும் வாக்கெடுப்பு நடைபெறும்போது அதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் ஒதுங்கியிருக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாட்டின்போது, சிறுபான்மையினருக்கு எதிரான தீர்மானங்களை எமது கட்சி முற்றாக எதிர்ப்பதற்கு முடிவெடுத்துள்ளதாகவும், 13இல் திருத்தம் செய்யும்போது அதனை முஸ்லிம் காங்கிரஸ் முழுமையாக எதிர்க்கப்போவதாகவும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 13இல் திருத்தம் மேற்கொள்வதற்கான மேல் மற்றும் கிழக்கு மாகாணசபை வாக்கெடுப்பின்போது யாருக்கும் பாதகமில்லாமல் முஸ்லிம் காங்கிரஸ் ஒதுங்கியிருக்குமென அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
(முஹம்மட் பிறவ்ஸ்)

விரைவில் மதமாற்ற தடைச்சட்டம்:சிங்கள ராவயவிற்கு உறுதியளித்தார் ஜனாதிபதி!





மதமாற்றத் தடைச்சட்டத்தை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள ராவய அமைப்பின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.பசுவதை தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தி ஹம்பாந்தோட்டை முதல் கொழும்பு வரை பாதயாத்திரை மேற்கொண்ட சிங்கள ராவய பிரதிநிதிகளை அலரி மாளிகைக்கு வரவழைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
அந்த சந்திப்பின் போது இலங்கையில் மதமாற்ற தடைச்சட்டம், வடக்கு கிழக்கு உள்பட நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் பாரிய புத்தர் சிலைகளை நிறுவுதல், வடக்கில் பௌத்த சின்னங்களை புனரமைத்துப் பாதுகாத்தல் மற்றும் இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதைத் தடுத்தல் போன்ற விடயங்கள் குறித்து சிங்கள ராவய பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

தேசிய பாதுகாப்புத் தகவல்களை திருட தனது கைப்பேசி உரையாடல்கள் ஒட்டுகேட்கப்படுவதாக கோத்தாபய முறைப்பாடு


தேசிய பாதுகாப்புத் தகவல்களை திருட தனது கைப்பேசி உரையாடல்கள் ஒட்டுகேட்கப்படுவதாக கோத்தாபய முறைப்பாடு

தனது கையடக்க தொலைபேசி உரையாடல்கள் செவிமடுக்கும் திட்டமிட்ட சிலர் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பெறும் சட்டவிரோத முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசேட விசாரணைகளில் வெளிநாட்டு தூதரகம் ஒன்றும் வெளிநாட்டு புலனாய்வு சேவை ஒன்றும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளரை தவிர மேலும் முக்கிய நபர்கள் பலரின் தொலைபேசி உரையாடல்களையும் இவர்கள் செவிமடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு தேவையான கருவிகளை அவர்களிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பிக்குவின் தாக்குதலால் காலியில் ஒருவர் மரணம்


காலி லபுதுவ பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றைச் சேர்ந்த பிக்கு ஒருவர் தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த பிக்கு அக்மீமன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதான நபரொருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 27 ஆம் திகதி இரவு சந்தேக நபரான பிக்குவுக்கும், அந்நபருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்தே குறித்த பிக்கு அந்நபரைத் தாக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
-வீரகேசரி

மின் கட்டணத்தைப் பார்த்து “ஹார்ட் அட்டாக்” ஏற்பட்டு மரணம்


மின் கட்டணச் சுமை அதிகரித்திருக்கும் இவ்வேளையில் நேற்றைய தினம் தனது மின் கட்டண அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சியில் இதயத் துடிப்பையிழந்து வாடிக்கையாளர் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எஸ்.பி. சமரதாஸ என அறியப்படும் நபர் நேற்றைய தினம் மின்சார சபை தலைமையகத்திற்கு விஜயம் செய்தபோது, அங்கு வைத்து தனது மின் கட்டணத்தை அறிந்தே இவ்வாறு சரிந்ததாக உள்ளூர் ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரைம் சஞ்சிகையை கிழிக்க கோரிக்கை விடுத்த பொது பல சேனா


bodu-balaபௌத்த பிக்குவான விராது மற்றும் அவரது பௌத்தம் 969 என்ற அமைப்பினால் நடத்தப்படும் இனவாத, மதவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, அதற்குத் தலைமை தாங்கும் விராது பிக்குவின் அட்டைப்படத்துடன், “பௌத்த தீவிரவாதத்தின் முகம்” என்ற அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டுள்ளது நியுயோர்க்கில் இருந்து வெளியாகும் ‘ரைம்‘ சஞ்சிகை.
இந்த சஞ்சிகையை எவ்வாறு இலங்கையில் அணுகுவது தொடர்பாக ஊடக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் ஊடக அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லயுடன் கலந்தாலோசித்ததாக ஆங்கில இணையம் ஒன்று செய்தி வெளியிடுள்ளது.
இதேவேளை, பொது பல சேனா அமைப்பினர் இலங்கைக்கு வந்த இந்த சஞ்சிகையின் அனைத்து பிரதிகளையும் கிழித்து விடுமாறு ஊடக அமைச்சிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஊடக அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் ஆலோசித்ததாக அந்த ஆங்கில இணையம் செய்தி வெளியிடுள்ளது.
ரைம் சஞ்சிகையின் ஒன்லைன் பிரதிகளையும் வாசிக்க முடியாதவாறு தடைசெய்யுமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சஞ்சிகையை ஏற்கனவே மியன்மார் அரசு தடைசெய்துள்ளது.
Time

சிங்கள இனத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் மட்டுமே அதிகாரம் இருக்கும்: அஸ்கிரிய பீடாதிபதி



சிங்கள இனத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் மட்டுமே அதிகாரம் இருக்கும் என கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உடுகம சிறிபுத்த ரக்கித தேரர் தெரிவித்துள்ளார்.
கூடினால் இன்னும் ஐம்பது ஆண்டுகள் மட்டுமே சிங்கள இனத்திற்கு இந்த நாட்டின் அதிகாரம் இருக்கும் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஏனைய இனங்களின் அதிகாரத்திற்கு அடிபணிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் சிங்கள இனத்திற்கு தனித்துவமான அடையாளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விடும்.

எதிர்காலம் பற்றி சிந்திக்காது குறுகிய இலாபங்களை கருத்திற் கொண்டு செயற்படும் சிங்கள மக்களே இந்த நிலைமைக்கு பொறுப்பு.

சிங்கள மக்களின் நடவடிக்கைகளினால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பு ஏற்கனவே இழக்கப்பட்டுள்ளது.

இப்படியே சென்றால் இன்னும் 30 – 40 ஆண்டுகளில் மொத்த நாட்டையும் இழக்க நேரிடும். எமது மக்கள் தங்களது பூர்வீக நிலங்களை சொற்ப தொகைக்கு விற்பனை செய்கின்றனர். இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

சிங்கள மக்களிடமிருந்து அதிகாரத்தை பறித்துக் கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வரும் தருணத்தில் அது பற்றி சிங்கள மக்கள் கவலைப் படுவதில்லை என அஸ்கிரி பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

ரம்புக்வெல்ல விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனை தனக்கு பொருந்தாது -13 தொடர்பான நிலைப்பாட்டை விட்டு கொடுக்கும் எண்ணம் இல்லை -வாசுதேவ



ஜனாதிபதியின் ஆலோசனை தனக்கு பொருந்தாது -13 தொடர்பான  நிலைப்பாட்டை விட்டு கொடுக்கும் எண்ணம் இல்லை -

ஜனாதிபதியினால், அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருக்குமாறு வழங்கிய ஆலோசனை தனக்கு பொருந்தாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
மாகாண சபை உள்ளிட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டை விட்டு கொடுக்க தனக்கு எந்த எண்ணமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
 
தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்க போவதாகவும் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் தொடர்புடையவர் அல்ல எனவும் தான் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணிய போவதில்லை எனவும் அத்துடன் அரசாங்கத்தை சிக்கிலில் மாட்டிவிட போவதில்லை எனவும் வாசுதேவ கூறியுள்ளார்.
 
மாகாண சபைகளின் அதிகாரங்கள் மற்றும் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் எதிர்காலத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் தான் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க போவதில்லை என தெரிவித்துள்ள அவர், எந்த காரணம் கொண்டு அரசாங்கம் தோல்வியடைய இடமளிக்க போவதில்லை எனவும் இது கூலையும் தாடியையும் பாதுகாத்து கொள்ளும் செயற்பாடு எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

“13″ மசோதா பாராளுமன்றம் வரும்போது திவிநெகும போன்று ஹக்கீமும் ஆதரிப்பார்!


Mubarak13வது திருத்தத்துக்கு முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருப்பதன் மூலம் அக்கட்சியின் தலை முதல் கால் நுணிவரை சுயநலமே உள்ளது என்ற எமது குற்றச்சாட்டு மீண்டும் உறுதியாகியுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.
இது பற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது;
“13வது திருத்தத்துக்கு ஆதரவளிப்பதில்லை என மு. கா.வின் உயர்பீடம் முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் அண்மையில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அப்படியிருந்தும் மேற்படி மாகாண சபை உறுப்பினர்கள் திருத்தத்துக்கு ஆதரவளித்தமையானது அக்கட்சியினரின் சமூகம் பற்றிய அறியாமையையும் மு. கா.வினரின் வழமையான சுயநல அரசியலையுமே காட்டுகிறது.

பௌத்த பேரினவாதத்தை தோலுரிக்கும் ரைம் சஞ்சிகை சிறிலங்காவில் தடுத்து வைப்பு?


The Face of Buddhist Terrorமியான்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தலைமை தாங்கும்,பௌத்த பிக்குவான விராது மற்றும் அவரது பௌத்தம் 969 என்ற அமைப்புடன் பொதுபல சேனாவை ஒப்பிடும் கட்டுரை தாங்கிய ரைம் சஞ்சிகை சிறிலங்காவில் தடுத்து வைக்கப்படவுள்ளதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிடுள்ளது..
மியான்மாரில், முஸ்லிம்களுக்கு எதிராக, பௌத்த பிக்குகள் தலைமையில் நடத்தப்படும் இனவாத, மதவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, அதற்குத் தலைமை தாங்கும் விராது பிக்குவின் அட்டைப்படத்துடன், பௌத்த தீவிரவாதத்தின் முகம் என்ற அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டுள்ளது நியுயோர்க்கில் இருந்து வெளியாகும் ‘ரைம்‘ சஞ்சிகை.
இந்தக் கட்டுரையில் சிறிலங்காவில் தலைதூக்கும் பௌத்த பிக்குகளின் பேரினவாதம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, பௌத்த பேரினவாத அமைப்பான பொதுபல சேனாவுடன், விராது பிக்குவின் பௌத்தம் 969 என்ற அமைப்பு ஒப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரை வெளியாகியுள்ள ரைம் சஞ்சிகையின் ஜுலை மாத இதழ், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இது சிறிலங்காவில் விநியோகிக்கத் தடை விதிக்கப்படலாம் என்று தெரியவருகிறது.
எனினும் இது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்காவின ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல் தெரிவித்துள்ளார்.
The Face of Buddhist Terror

மணலாறில் புதிய சிங்களக் கிராமம் – சிறிலங்கா படையினருக்கு காணிகள்




முல்லைத்தீவு மாவட்டத்தில், மணலாறு (வெலிஓயா) பிரதேசத்தில் சிறிலங்காப் படையினரின் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, புதிய சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த திங்கட்கிழமை, ரணவிரு பியச சம்பத்நுவர என்ற மாதிரிக் கிராமத்தை சிறிலங்காப் படையினருக்கு உருவாக்குவதற்காக காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் 80 பேர்ச் காணித் துண்டுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் 52 சிறிலங்காப் படையினரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் வழிகாட்டுதலில், வன்னிப் படைகளின் தலைமையகத்தினால், இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் சிறிலங்காப் படையினரின் குடும்பங்கள் குடியேற்றப்படவுள்ள இந்தக் கிராமத்தில், அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்கவும் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
jvpnews_Sampathnuwara1

உலகின் புதிய அச்சுறுத்தலாகப் பலம்பெற்றுவரும் ‘பௌத்த பயங்கரவாதம்’


மதங்களுக்கிடையேயான மோதல்கள் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படும் இன்றைய நிலையில், உலக நாடுகள் சிலவற்றில் பலம்பெற்றுவரும் ;பௌத்த தீவிரவாதம்’ குறித்து அமெரிக்க வார சஞ்சிகையான ‘ரைம்’ ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ரைம் சஞ்சிகை, தனது ஜுலை மாதத்திற்கான இதழின் அட்டைப் படத்தில் பார்மிய பௌத்த வன்முறைக் கும்பலின் தலைவரான விராது தேரரின் புகைப்படத்தைப் பிரசுரித்து, அவரை ‘பர்மிய பின்லாடன்’ என்று குறிப்பிட்டுள்ளது. ஆசிய நாடுகள் சிலவற்றில் வளர்ந்துவரும் பௌத்த தீவிரவாதத்தை விபரித்துள்ள அந்தக் கட்டுரையில், இலங்கைத் தீவில் பெருகிவரும் பௌத்த வன்முறைகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.
வெறுமனே படிப்பதற்கான செய்தியாக அல்லாமல், ஒரு எச்சரிக்கையாகவே ரைம் சஞ்சிகை இதனைப் பிரசுரித்துள்ளது. கம்போடியா, தாய்லாந்து, மியன்மார், இலங்கை ஆகிய பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில் அங்கு வாழும் சிறுபான்மை மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற பௌத்த மேலாண்மை வன்முறைகள் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சபையில் 13 ஆவது திருத்தத்தை தோற்கடிப்போம் - ரவூப் ஹக்கீம்

மாகாண சபைகளின் 13 ஆவது சட்டத்திருத்தம் அடிப்படை உயிர்நாடி என வர்ணித்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண சபையில் அந்த விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் போது அதற்கு எதிராக வாக்களிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆர்வமாக இருப்பதாகவும், இதுதொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடியிருப்பதாகவும் அவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கிழக்கு மாகாண சபையில் 13 ஆவது திருத்தம் தொடர்பிலான விவாதம் நடைபெறுகையில் அதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் வாக்களிக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்,

Friday, June 28

சிறுபான்மையினருக்கு அநீதிகள் இழைக்கப்படும் போது மு.கா. மெளனமாக இருக்காது - ரவூப் ஹக்கீம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் சிறுபான்மையினரின் விடயத்தில் மிக விழிப்பாகவே இருக்கும் அதற்காக முதலில் நாம் ஒருமித்த கருத்துடன் செயற்பட வேண்டும். அரசியலிலுள்ள சில சிறுபான்மையினத் தலைவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்பட எத்தனிக்கும் போது அதற்கும் ஆதரவளிக்கலாம். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அவ்வாறான அநியாயங்கள் இழைக்கப்படுகின்ற போது மெளனமாக இருக்காது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழு ஏற்பாட்டில் முப்பெரும் விழா கடந்த பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் மத்திய குழுவின் தலைவர் ஐ.எல்.சுலைமாலெவ்வை தலைமையில் நடை பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடக்கு கிழக்கு முஸ்லிம்களை பாதுகாக்க செயற்படும் முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களை பாதுகாக்கவும் செயற்படும்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் விளைவுதான் 13 ஆம் திருத்தச் சட்டமாகும். இந்த மாகாண சபை முறைமையை ஆரம்பத்தில் வித்திட்டதில் ஒன்று இந்த முஸ்லிம் காங்கிரஸாகும். அப்போது போட்டியிட்டவர்கள் எல்லோரும் நகல் உறுப்பினர்கள். இந்த மாகாண சபைத் தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டு வந்தவன் நான் என்றும் எனக்கு மாகாண சபையின் அதிகாரங்களைப் பற்றி நன்கு தெரியும் அதைப்பற்றி யாரும் எனக்கு சொல்லித் தரத்தேவையில்லை என்று அமைச்சர் அதாவுல்லா அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெற்று ஒரு சாதனை படைத்துக்காட்டியுள்ளது. இதற்கு மக்கள் பலத்த ஆதரவை தந்துள்ளதால் இக்கட்சி மக்கள் மத்தியில் உள்ளதை யாரும் அசைக்க முடியாது. 

அடுத்த போயா தினத்துக்குள் சிறுபான்மை அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம்


ganasara deroநாட்டிலுள்ள சிறுபான்மை அமைப்புகள் மீது இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் உத்தியாகபூர்வமற்ற பொலிஸ்காரராகிய எங்களது அமைப்பு தாக்குதல் நடத்துமென பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர், தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அங்கு கருத்து வெளியிட்ட ஞானசார தேரர்; எதிர்வரும் எசல போயா தினத்திற்கு முன்னர் நாட்டிலுள்ள சகல சிறுபான்மை அமைப்புகள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிடில் உத்தியோகபூர்வமற்ற பொலிஸ்காரராகிய நாங்கள் குறித்த அமைப்புகள் மீது தாக்குதல்களை மேற்கொள்வோம்.
இனிமேல் சிங்க கிராமங்களுக்குள் நுழையும் வேறு இனத்தவர்களை அடித்து விரட்டுவதற்காக பெளத்த பாதுகாப்பு குழுக்களை நியமிப்பதற்கு எமது அமைப்பு தீர்மானித்துள்ள மேலும் தெரிவித்தார்

மாடு அறுப்பதை நிறுத்தும் சட்டம் இன்னும் 2 மாதத்தில் - அக்மீமன தயாரத்ன தேரர்



இலங்கையில் மாடு அறுப்பதை தடை செய்யும் சட்டம் இன்னும் இரண்டு மாதங்களில் கொண்டுவருவதாக தனக்கு ஜனாதிபதி உறுதி அளித்ததாக சின்ஹல ராவய கூறுகிறது. இதனை அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சார்பான இணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
மாடு அறுப்பதை முற்றாக நிறுத்தக் கோரி கதிரகமத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாத யாத்திரை அலறி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம்  பத்து லட்சம் கைஒப்பங்களுடன் கைaளிக்கபட்ட போதே இந்த வாக்கை தமக்கு வழங்கியதாக அவ் இயக்கத்தின் தலைவர் அக்மீமன  தயாரத்ன தேரர் சொல்லுகிறார்.
தெட்கிலிருந்து இப் பாதயாத்திரை வரும்பொது அரசாங்கத்தின் அனுமதியோடு இயங்கி வந்த ஒரு இறைச்சிக் கடையை அடித்து நொருக்கியதாகக்  கூறப்படும் குற்றத்தை மறுக்கும் அவர் அச் செயலை தான் கண்டிப்பதாகவும் கூரியுள்ளார்.
ශ්‍රී ලංකාවේ ගව ඝාතනය නැවැත්වීම සඳහා මාස දෙකක් ඇතුලත නීති සම්පාදනය කරන බව ජනාධිපති මහින්ද රාජපක්‍ෂ මහතා දැනුම් දුන්නේ යයි සිංහල රාවය සංවිධානය පවසයි.
ගව ඝාතනයට එරෙහිව එම සංවිධානය දකුණෙන් ඇරැඹු පා ගමන අරලියගහ මන්දිරය අසලින් අවසන් වූයේ අත්සන් දස ලක්ෂයක් සහිත පෙත්සමක් ජනාධිපති මහින්ද රාජපක්ෂ වෙත භාරදීමෙනි.
එහිදී ජනාධිපතිවරයා තමන්ට එම පොරොන්දුව දුන් බව, සිංහල රාවය ජාතික සංවිධානයේ සභාපති අක්මීමන දයාරත්න හිමියෝ පැවසූහ.
දකුණේ සිට පා ගමනින් පැමිණෙන අතරවාරයේ තංගල්ල ප්‍රදේශයේ රජයේ අවසර ලත් ගව මස් අලෙවි හලකට ප්‍රහාරයක් එල්ල කළ බවට කෙරෙන චෝදනාව ප්‍රතික්ෂේප කළ එහිමියෝ එම සිදුවීම හෙලා දකින බවද කියා සිටියහ.

மாட்டிறைச்சிவாதம்!






 கடந்த வெசாக் பண்­டிகை தினத்­தன்று தலதா மாளி­கையின் முன்­னி­லையில் பௌத்த பிக்கு ஒருவர் மாட­றுப்­புக்கு எதி­ராக தீக்­கு­ளித்துக் கொண்ட சம்­பவம் தெரிந்­ததே. இது மதத்­துக்­காக செய்த உயிர்த்­தி­யாகம் என்­ப­தாக ஹெல உறு­மய கட்சி தெரி­வித்­தி­ருந்த நிலையில் தற்­பொ­ழுது தேசப்­பற்­றுள்ள அர­சியல் எழுத்­தாளர் ஒருவர் குறித்த பௌத்த பிக்­குவின் செயலை, மிரு­க­வதைக்கெதி­ரான உன்­ன­த­மா­ன­தொரு அர்ப்­பணம் என்­ப­தாக பத்­தி­யொன்றில் வர்­ணித்­தி­ருந்தார். பால்மா இறக்­கு­ம­திக்­காக வேண்டி நாடு கூடு­த­லான நிதித் தொகையை செல­வ­ளிக்க வேண்­டி­யுள்­ள­தனால் நாட்­டுக்குத் தேவை­யான பாலை இங்­கேயே உற்­பத்தி செய்து கொள்ள வேண்டும் என்­ப­தா­கவும் அத்­த­கைய தேசப்­பற்­றுள்­ள­வர்கள் குர­லெ­ழுப்­பு­கி­றார்கள். நாட்டில் வலு­வ­டைந்து வரு­கின்ற மாட்­டி­றைச்சி எதிர்ப்புக் கோட்­பாடு நாட்டின் பால் உற்­பத்­தியை பெரிதும் பாதித்து விடும் என்­பது அவர்­க­ளுக்கு புரி­யா­துள்­ளது.

மத்துகம பிரதேச சபையில் மாடறுப்புத் தடைக்கான பிரேரணை படுதோல்வி

மத்துகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மாடறுப்பதையோ மாட்டிறைச்சிக் கடை நடத்துவதையோ தடைசெய்ய தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று மத்துகம பிரதேச சபைத் தலைவர் எல்.ஜீ. லியன ஆராச்சி கூறினார்.
மத்துகம பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் கூறியதாவது,
இலங்கையில் 16 சதவீதமானோர் போஷாக்குக் குறைபாட்டினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது மாட்டிறைச்சிக்கு தடைவிதிப்பது முட்டாள் தனமானதாகும். அதேபோன்று ஆடு, கோழி மற்றும் கடல் உயிரினங்களும் உணவாகக் கொள்ளப்படுகின்றன. இவையும் உயிர்க் கொலையாகும். இவற்றுக்கும் தடை விதிக்கப்படுகின்றதா என்று சூடான தொனியில் கேள்வி எழுப்பிய அவர், தான் மத்துகம பிரதேச சபையில் முதுகெலும்புள்ள ஒரு தலைவர் என்ற வகையில் மாடறுப்புக்கும் இறைச்சிக் கடைக்கும் எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணையை ஆட்சேபித்து நிராகரிப்பதாக தெரிவித்தார்.
மத்துகம பிரதேச சபையின் ஜூன் மாதத்துக்கான கூட்டம் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற போதே ஆளும் தரப்பு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் டபிள்யூ.ஏ.விஜித்த, மத்துகம பகுதியில் மாடு அறுப்பதற்கும் மாட்டிறைச்சிக் கடை நடத்துவதற்கும் எதிராக பிரேரணை ஒன்றினைச் சமர்ப்பித்திருந்தார்.
இதனை ஆதரித்து ஆளுந்தரப்பு உறுப்பினர்களான டீ.டீ.லலித் ரணசிங்க, அத்துல மத்துமகே மற்றும் எதிரணித் தலைவர் ஜினதாஸ் சிரிவர்த்தனவும் உரை நிகழ்த்தினர்.  அதனைத் தொடர்ந்து சபைத் தவிசாளரினால் இப்பிரேரணை அனுமதிக்க முடியாதென நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்து வருமாறு அதாவுல்லாவுக்கு மைத்திரிபால அழைப்பு!

தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்து வருமாறு அதாவுல்லாவுக்கு மைத்திரிபால அழைப்பு! 
டெங்கு ஒழிப்பு திட்டம் தொடர்பில் தன் மீது மாத்திரம் குற்றம் சுமத்த வேண்டாம் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஊடகவியலாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெங்கு ஒழிப்பு திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சு மீது மாத்திரம் குற்றம் சுமத்த சில ஊடகங்கள் முயற்சிப்பதாகவும் இது குறித்து உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மற்றும் அமைச்சரிடம் ஊடகங்கள் கேள்வி கேட்பதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜூலை 1ம் திகதி தொடக்கம் 7ம் திகதி வரை இடம்பெறவுள்ள டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இன்று (28) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளை அமைச்சு தூக்கத்தில் இருப்பதாகவும் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்து இப்பிரச்சினையை தீர்க்க முன்வருமாறு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவுக்கு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க சுற்றாடல் அமைச்சும் முன்வர வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

(அத தெரண - தமிழ்) 

காவியுடையினரின் தலிபான் பாணியிலான தாக்குதல்களை அனுமதியோம்: அஜித் பிரசன்ன
















சமயங்களின் பெயரால் இறைச்சிக்கடைகளை தாக்குவதையும் எரியூட்டுவதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது தலிபான்களின் பாணியிலான செயலாகும். காவியுடைய தரித்து இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது குற்றமாகும். பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்க இவ்வாறான குற்றச் செயல்கள் நடைபெறுவது மிகவும் மோசமானது என தென்மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன (ஐ.ம.சு.மு) தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்;-
காவியுடைக்கு நாம் கெளரவமளிக்க வேண்டும். இதே வேளை காவியுடையின் பலத்தினால் சட்டம் மீறப்படும் போது பொலிஸார் அதற்குப் பயப்படத் தேவையில்லை.
இவ்வாறானவர்களை மஜிஸ்திரேட்டின் உத்தரவின்றியே கைது செய்யலாம் என்று சட்டம் இருக்கும் போது பொலிஸார் குற்றச் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது.
பொலிஸ் மா அதிபர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை அவர்களது தராதரங்களைக் கருதாது கைது செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மாகாண சபை உறுப்பினர் ஒருவர் ஆசிரியை ஒருவரை மண்டியிடச் செய்த செய்கைக்கும் பெளத்த குருமார் சட்டத்துக்கு முரணாக தங்கல்லையில் இறைச்சிக் கடையொன்றுக்கு தீ வைத்த செயலுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை என்றார்.

13 ஐ திருத்தினால், பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்போம் - இந்தியா

 
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் முக்கிய அதிகாரங்களை நீக்குவதற்கு சிறிலங்கா அரசு தலைப்படுமானால் பொதுநலவாய மாநாட்டினைப் பகிஷ்கரிக்க இந்தியா உத்தேசித்திருப்பதாக நம்பகமாக அறியமுடிகின்றது

இந்தியாவின் இந்த நிலைப்பாடு இராஜதந்திர ரீதியாக கொழும்புக்கு அறிவிக்கப்படுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா - இந்திய ஒப்பந்தம் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பதாலும், அதனை மீறும் வகையில் சிறிலங்கா செயற்பட்டால் அது இந்தியாவின் தன்மானத்துக்கே சவால் விடும் வகையில் அமைந்துவிடும் என்பதாலும், இது விடயத்தில் இந்திய காங்கிரஸ் அரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளதாக இந்திய அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா பகிஷ்கரித்தால் அது சர்வதேச ரீதியில் சிறிலங்காவுக்கு அவப்பெயரை தந்துவிடும்.

எனவே பொதுநலவாய மாநாடு மற்றும் தமிழீழத்தில் நடத்தவுள்ள தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசமைப்புத் திருத்தங்களைச் செய்யுமாறு சிறிலங்கா அரசுக்கு மூத்த இராஜதந்திரிகள் பலர் ஆலோசனை தெரிவித்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை இந்திய புறக்கணிக்கும் பட்சத்தில், வேறும் பல நாடுகள் புறக்கணிக்க ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

எமக்கு அரசாங்கம் ஆதரவளிக்கவில்லை: பொது பல சேனா






எமது அமைப்புக்கு அரசாங்கம் ஆதரவளிக்கிறது என ஊடகங்கள் உட்பட பலரால் முன்வைக்கப்படும் குற்றச்ாட்டை மறுப்பதாக பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவ் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு மேலும் குறிப்பிடுகையில்,
நாம் ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக பல தடவைகள் முயற்சி செய்தோம். எமது அமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரி 18 கடிதங்களை அனுப்பினோம். அதன் பிற்பாடுதான் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி ஜனாதிபதியை நாம் சந்தித்தோம். இதுவே எமக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான தொடர்பை வெளிப்படுத்தப் போதுமானது.
ஆனால் பாதுகாப்புச் செயலாளருக்கும் எமது அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரருக்குமிடையில் நீண்ட காலமான தனிப்பட்ட உறவு இருக்கிறது. அதனால்தான் எமது அழைப்பையேற்று அவர் காலியில் இடம்பெற்ற அலுவலக திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டார் என்றார்.

13இல் திருத்தம் மேற்கொள்வதற்கான வாக்கெடுப்பை மு.கா. புறக்கணிக்கும் என எதிர்பார்ப்பு

slmcசர்ச்சைக்குரிய 13ஆம் திருத்தச் சட்டம்மூலம் குறித்து வாக்கெடுப்புகளை முஸ்லிம் காங்கிரஸ் பகிஷ்கரிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணசபை மற்றும் கிழக்கு மாகாணசபையில் 13இல் திருத்தம் மேற்கொள்வதற்கான வாக்கெடுப்புகளில் முஸ்லிம் காங்கிரஸ் கலந்துகொள்ளாதென நம்பப்படுகிறது.
இத்திருத்தம் குறித்து வடமேல் மாகாணசபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது இரு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததினால் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அவர்களை கட்சித் தலைமை இடைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

13 ஆவது திருத்தம் முஸ்லிம்களின் விருப்புடன் நிறைவேற்றப்பட்டதல்ல: ரிஷாட்




13வது திருத்தச் சட்டம் இலங்கை முஸ்லிம்களின் விருப்பத்தோடு நிறைவேற்றப்பட்ட சட்டமல்ல. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டதாகும். இச் சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் சாதக பாதகம் உள்ளது. இது பற்றி ஆராயப்பட வேண்டியுள்ளது.
இச்சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மையினரின் நலன் கருதி யோசனைகளை முன்வைக்கும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் விடிவௌ்ளிக்குத் தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எவ்வகையிலான யோசனைகளை முன்வைக்கும் என வினவியபோதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இரு மாகாணங்கள் தாம் விரும்பினால் இணைந்து கொள்ளலாம் என்ற சட்டவிதியில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி முன்வைத்துள்ள ஆலோசனைக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இவ்விடயம் தொடர்ந்தும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மாகாணசபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் விடயத்திலே ஆளும் கட்சியினரிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்த திருத்தச் சட்டம் தொடர்பில் எமது கட்சி தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறது. எமது யோசனைகள் சிறுபான்மை சமூகத்தின் நலன்களைப் பாதிக்காத வகையிலேயே அமையும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

நாங்கள் விலகமாட்டோம் ; ஜனாதிபதி வேண்டுமானால் விலக்கட்டும் : ஹஸன் அலி


என்னதான் எங்களுக்கு மரியாதை தரவில்லையென்றாலும், தெரிவுக்குழுவில் எம்மைச் சேர்க்கவில்லையாகினும், கூட்டணி அரசிலிருந்து நாங்களாக விலகமாட்டோம், ஜனாதிபதி விரும்பினால் எம்மை விலக்கட்டும் என்று  கூறுகிறார் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஹஸன் அலி.
அதேவேளை, 13ம் திருத்தச்சட்டத்தினை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்த இரண்டு உறுப்பினர்கள், ரிஸ்வி ஜவஹர்ஷா மற்றும் எஹியா ஆப்தீன் ஆகியோர் நீக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிடுகையில் அவர்களை கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவுப் ஹகீமே நீக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் - தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கலந்துரையாடல்



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் -தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கியமான கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை இரவு 7.மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையக காரியாலயமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றது.


இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சுமந்திரன்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக அதன் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்,ஸ்ரீ.ல.மு.கா செயலாளர் நாயகம் பா.உ ஹஸனலி,ஸ்ரீ.ல.மு.கா உச்ச பீட உறுப்பினர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்,ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஓன்றரை மணித்தியாலம் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் தற்போதய அரசியல் சூழ்நிலை ,சிறுபான்மை சமூகங்கள் அதிகார பகிர்வின் உச்ச பயன்களை அடையக்கூடிய வழிமுறைகள்,13ம் சட்ட திருத்தத்திற்கு ஏதிராக எழுந்துள்ள சவால்கள் என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான பேச்சுக்களை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் வழமையாக நடாத்திவருகின்றது அத்தோடு இவ்வாறான பேச்சுக்களை ஏனைய கட்சிகளுடன் நடாத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மாணித்துள்ளது.