Sunday, June 30

புத்தசாசன அமைச்சினால் மத மாற்றங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? - பொதுபல சேனா கேள்வி


புத்தசாசன அமைச்சினால் மத மாற்றங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - பொதுபல சேனா

 
நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள சட்டத்திட்டங்கள் மூலம் பௌத்த மக்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும் சிங்கள் பௌத்த மக்களை ஏமாற்றி நாடு முழுவதும் மிகவும் சூட்சுமான முறையில் செயற்படுத்தப்பட்டு வரும் மதமாற்ற நடவடிக்கைகளை காவற்துறை மா அதிபரின் தலையீட்டின் அடிப்படையில் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
 
புத்தசாசனம் என்ன என்பதை விளக்கி கூற கூட முடியாத, நாட்டின் புத்தசாசன அமைச்சினால், நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், இந்த மத மாற்றங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஹங்வெல்ல, கந்தானை, பேருவளை உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களில் இவ்வாறான மாற்று மதங்களின் ஜெப நிலையங்கள் செயற்பாடுகள் காரணமாக  பல பௌத்த மக்கள் இடையூறுகளுக்கு முகம் கொடுப்பதுடன், ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்த மாற்று மதத்தினர், மக்களின் வறிய நிலைமை பயன்படுத்தி, அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி, மத மாற்றம் செய்து வருகின்றனர். இது தார்மீகத்திற்கு எதிரான தவறு.
 
அடிப்படைவாத சமய அமைப்புகள் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அவை இலங்கையில் மாத்திரம் செயற்பட அனுமதித்திருப்பது மிகவும் கவலைக்குரியது எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment