Wednesday, April 25

எகிப்து - இஸ்ரேலுடனான எரிவாயு ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது!


இஸ்ரேலுடன் கையெழுத்திட்ட நீண்டகால எரிவாயு விநியோக ஒப்பந்தத்தை எகிப்து ரத்துச் செய்துவிட்டது.

ஒப்பந்த நிபந்தனையின் படி பணம் கட்டாததால் ஒப்பந்தத்தை ரத்துச் செய்துவிட்டதாக எகிப்தின் நேச்சுரல் கேஸ் ஹோல்டிங் கம்பெனி தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தை ரத்துச்செய்த முடிவை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என்று கம்பெனியின் செய்தி தொடர்பாளர் முஹம்மது சுஐப் தெரிவித்துள்ளார்.

முரண்பட்டுச் செல்வது தான் பொருத்தமென்றால் முரண்படுவதற்கும் தயங்க மாட்டோம்


இர்ஷாத் றஹ்மத்துல்லா: கடந்த 2012.04.20 வெள்ளிக்கிழமை தம்புள்ள ரங்கிரிய ஹைரியா பள்ளிவாசல் மீது தொடுக்கப்பட்ட மிலேச்சனத்தனமான தாக்குதல் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளையும் வெகுவாக பாதித்திருக்கின்றது.முஸ்லிம்கள் தமது உயிர்கள் மற்றும் உறவுகளை விடவும் தமது மார்க்கத்தை உயர்வாக மதிக்கின்றார்கள்.அவ்வாறான ஒர் சமூகத்தின் வணக்கஸ்தலத்தை இன்னுமொரு மதத்தின் பெயரால் தகர்க்க முற்படுவதானது பாராதூரமாக கண்டிக்கப்படக் கூடியது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தள்ளார்.

தம்புள்ள மஸ்ஜித் - முஸ்லிம்கள் ஹர்த்தால் செய்வதாயின் வரம்பு மீறாமல் செயற்படுங்கள் ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!








April 25, 2012 | 

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலையடுத்து முஸ்லிம்கள் மிகுந்த கவலையிலும் சமூக ஒற்றுமை சீர்குலைந்து விடுமோ என்ற அச்சத்திலும் இருந்து வருகின்றனர். சிலர் மேற்படி விடயத்தை கண்டிக்கவும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று தூண்டிக் கொண்டும் இருக்கின்றனர்.

இந்நிலையில் இஸ்லாம் காட்டிய வழிமுறையொன்று இருக்கிறது என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நினைவூட்ட விரும்புகிறது.


தம்புள்ளப் பள்ளிவாசல்! ஐ.நாவில் பிரேரணை!!

 

 
தம்புள்ள புனிதப் பிரதேசம் எனத் தெரிவித்து அப் பகுதியில் உள்ள பள்ளிவாசலை அகற்றுமாறு உத்தரவிட்டமை தொடர்பில், அரசு உறுதியான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு, அப் பள்ளிவாசலின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தாதுவிடும் பட்சத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் அது தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கப் போவதாக சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதத்துவேஷ நிகழ்வுகளுக்கு இந்து மா மன்றம் கடும் கண்டனம்

பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலயச்சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ ஆதரவால் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை தான் கண்டிப்பதாக அகில இலங்கை இந்து மா மன்றம் தெரிவித்துள்ளது.

இந்து மா மன்றத்தின் தலைவர் வி. கயிலாசபிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் ஆகியோர் iகெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையொனறிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை புனித பூமியில் ஒருபோதும் பள்ளிவாசல் இருக்கவில்லை: ஹெல உறுமய



ரங்கிரி தம்புள்ளை புனித பூமி பிரதேசத்திற்குள் உள்ள பள்ளிவாசல், ஒரு பள்ளிவாசல் அல்ல எனவும் அங்கு பள்ளிவாசல் அமைப்பதற்கு அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறவில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது.

1962 ஆம் ஆண்டு அப்பகுதியிலிருந்த வர்த்தகர் ஒருவருக்கு கடையொன்றை நிர்மாணிப்பதற்காக காணி வழங்கப்பட்டது என ஜாதிக ஹெல உறுமய தலைவர் வண. ஒமல்பே சோபித தேரர் கூறினார்.