Monday, February 20

சீன முஸ்லிம்கள் அன்றும், இன்றும் (வாசிக்கத் தவறாதீர்கள் - அரிய பல தகவல்கள்)


நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார். அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.

அப்படி என்ன வாதத்தை வைத்தார் அவர்?

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே (1421), சீன முஸ்லிம் கடல்வழி ஆய்வாளரான ஷெங் ஹி (Zheng He, இவரை ஷெங் ஹோ என்றால் தான் பல சீனர்களுக்கு தெரியும்) அமெரிக்காவை கண்டுபிடித்து விட்டார் என்ற தகவல் தான் அது.

முஸ்லிம் சிவில் சமூகம் என்ற பெயரில் 120 நபர்கள் கையெழுத்திட்டுள்ள அறிக்கை

 


முஸ்லிம் சிவில் சமூகம் என்ற பெயரில் 120 நபர்கள் கையெழுத்திட்டுள்ள அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் 1990 ஒக்டோபரில் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பதிலளிப்பதற்காக தமிழ் மக்களுக்கும் அவர்களின் சிவில் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுக்குமான வேண்டுகோள்’ எனும் தலைப்பில் 71 தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வெளியிட்ட அண்மைய கூற்றானது மீளிணக்கச் செயல்முறையில் ஒரு முக்கியமான சமிக்ஞையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளை அங்கீகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை நாம் வரவேற்கின்றோம்.

ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரிக்காது – சர்தாரி

pakistan-won-t-help-us-attack-iran-says-zardari

இஸ்லாமாபாத்:ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை ஆதரிக்கமாட்டோம் என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி அறிவித்துள்ளார். ஏதேனும் சர்வதேச நிர்பந்தங்களுக்கு அடி பணிந்து ஈரானுடனான உறவு சீர்குலைய அனுமதிக்கமாட்டோம் என்று அவர் கூறினார். ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நஜாத், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் ஆகியோருடன் சேர்ந்து நடத்திய கூட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார் சர்தாரி.

Saturday, February 18

சிங்கள மொழிப்பெயர்ப்பில் அல்குர்ஆன் - விரிவுரையான தப்ஹீமுல் குர்ஆன்



[ Fri, Feb 17, 2012, 01:25 pm ]

சிங்கள மொழிபெயர்ப்பில் அல்குர்ஆன் விரிவுரையான தப்ஹீமுல் குர்ஆன் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பிரதமர் டி.எம்.ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஜயந்த செனவிரத்னவும் சிறப்பு பேச்சாளராக பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம.சுக்ரியும் உரை நிகழ்த்தினர். நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ராஜித்த சேனரத்ன, பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் ஹஸனைஸ் பாரூக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Wednesday, February 1

முஸ்லிம் நாடுகளின் சாதனை- இணையத்தில் 'செக்ஸ்' தேடலில் பாகிஸ்தான் முதலிடம், எகிப்து நான்காமிடம்

இணையத்தளத்தில் 'செக்ஸ்' குறித்து அதிகம் தேடுதலை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. கூகுள் இணையத்தளத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் தொடர்பான தரவுகளின்படி, செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியா இரண்டாமிடத்திலும் வியட்நாம் மூன்றாமிடத்திலும் எகிப்து நான்காமிடத்திலும் இந்தோனேஷியா ஐந்தாமிடத்திலும் உள்ளதாக 'கூகுள் ட்ரென்ட்ஸ்' தரவுகள் வெளிப்படுத்துகின்றன.



அல்குர்ஆன் கல்வியின் தடைகள் பற்றிய சர்வதேச மாநாடு எகிப்தில் நடைபெறவுள்ளது.

 

புனித அல்குர்ஆன் கற்பதில் தடைகள் பற்றிய சர்வதேச மாநாடொன்றை
எகிப்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.எகிப்தின் சனத்தெகை மற்றும்உதவி ஆணைக்குழுவின் மேற்பார்வையில் உலக குர்ஆன் ஞாபக மன்றம் மற்றும்முஸ்லிம் இளைஞர் உலக மன்றம் என்பன இணைந்து இம்மாநாட்டை நடாத்தவுள்ளது. குர்ஆன் மனனமிட்டவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் அல்குர்ஆன் கல்வியின் தடைகள் பற்றிய மாநாடுநடைபெறவுள்ளது. எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தினதும் உலக குர்ஆன் ஞாபக மன்றத்தினதும் அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்குக் கொண்டிருக்கும் 80நாடுகளைச் சோந்த மாணவர்கள்,இம்மாநாட்டில் அல்குர்ஆன் கல்விகற்பதில் ஏற்படும் தடைகளை கலந்துரையாடல்கள் மற்றும் அதனை நிவர்த்தி செய்வதற்காக வழிமுறைகள் முன்மொழிவு பற்றிய அறிக்கைகள் போன்றவற்றை சமர்ப்பிக்கவுள்ளது.

க.பொ.த. சா.த. ஆங்கில பரீட்சையில் வாய்மூல சோதனை


க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப்பாடத்திற்கு அடுத்தவருடம் முதல் வாய்மூல சோதனையொன்றையும் அறிமுகம் செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
'அடுத்த வருடம் நாம் பரீட்சார்த்த திட்டமொன்றை மேற்கொள்வோம். அதில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து இப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இச்சோதனையை கட்டாயமாக்குவோம்' என அவர் கூறினார்.

ஈரான் மீதான தடைகள்: அச்சத்தில் இலங்கை


ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகள் இலங்கை போன்ற சிறிய நாடுகளின் மீது கை வைக்கும் செயல் என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இலங்கைக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் 93 வீதமளவு இரானிடமிருந்தே கிடைக்கின்றது.மற்ற நாடுகளை விட இலங்கையே இரானை முழுமையாக தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகின்றது.அத்துடன் இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரானிடமிருந்து வரும் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கக் கூடிய வசதியே இருப்பதால் தமது நாட்டுக்கு வேறு தெரிவுகளும் குறைவாகத்தான் இருக்கின்றன என்பதும் இலங்கையின் கவலைக்கு காரணம்.இந்த நிலைமைகளில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் இலங்கையையே கடுமையாக பாதிக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.இலங்கை நீண்டகாலமாகவே இரானுடன் உறவுகளை வளர்த்துவந்துள்ளது. அத்துடன் இலங்கைகு 7 மாத வட்டியில்லாக் கடன் அடிப்படையிலும் இரான் எண்ணெய் விநியோகித்துவருகிறது.இந்த பின்னணியில், இரானுக்கு எதிரான மேற்குலகின் தடைகளால் எழுந்துள்ள இராஜதந்திர சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இலங்கை உள்ளமை குறிப்பிடத்தக்கது. (பி.பி.ஸி)

முன்னாள் பெண் போராளிக்கும் சிங்கள சிப்பாய்க்கும் திருமணம்


கிளிநொச்சியில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும், விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற இலங்கை இராணுவச் சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியான சந்திரசேகரன் சர்மிளாவுக்கும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.மலையாளபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சர்மிளா புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார். 20 வயதான சந்துருவன் கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.