Wednesday, February 1

க.பொ.த. சா.த. ஆங்கில பரீட்சையில் வாய்மூல சோதனை


க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப்பாடத்திற்கு அடுத்தவருடம் முதல் வாய்மூல சோதனையொன்றையும் அறிமுகம் செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
'அடுத்த வருடம் நாம் பரீட்சார்த்த திட்டமொன்றை மேற்கொள்வோம். அதில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து இப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இச்சோதனையை கட்டாயமாக்குவோம்' என அவர் கூறினார்.

கொரிய மொழி, பிரெஞ்சு மொழி போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், பூகோளமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்வதற்கு நபர்களை உருவாக்குவதற்கு ஏற்ப கல்விக் கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

No comments:

Post a Comment