Wednesday, November 30

கடுகதி வீதியில் பஸ் சேவை இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு. இதுவரை 36 விபத்துக்கள்!


தெற்கு கடுகதி வீதியில் பயணிகள் போக்குவரத்துக்காக இ.போ.ச பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது மேலும் இரு வாரங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இ.போ.ச தெரிவிக்கின்றது. இ.போ.ச தலைவர் எம்.சி. பந்துசேன தகவல் தருகையில், இதற்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள சொகுசு பஸ் சேவைக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு விஷேட பயிற்சிகள் வழங்கப்படுவதனால், இச்சேவை தாமதமடைந்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை - விமல் வீரவன்சவுக்கு பிடிக்கவில்லையாம்

 


நாட்டின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் n;தாடர்பில் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச விமர்சனம் செய்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய ஆதரவாளர்களில் ஒருவரான விமல்வீரவன்ச, நெடுஞ்சாலை குறித்து வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை சுற்றாடல் காரணிகளை கருத்திற் கொள்ளாது அமைக்கப்படடுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் கெப்பட்டிபொலவின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் மும்மொழி அறிவிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது

அனைத்து ரயில் நிலையங்களிலும் மும்மொழி அறிவிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில் போக்குவரத்து தொடர்பான தகவல்களை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அறிவிக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

சில ரயில் நிலையங்களில் ரயில் போக்குவரத்துக்கள் குறித்து மும்மொழிகளிலும் அறிவிப்பு செய்யப்படுவதில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென அரச மொழிக் கொள்கை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!


வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவ்வாறு பணியாற்றும் ஊழியர்களைத் திரும்ப நாடுகடத்தவும் செய்கின்றது. எனினும், துபாய் மோகத்தால் இத்தகைய சட்டவிரோத வேலைவாய்ப்புகள் வெவ்வேறு வகைகளில் நடந்து வருவதை அந்நாட்டு அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

உலகின் முதலாவது பாலியற் கல்லூரி - உலகம் எங்கே போகிறது


தலைமை ஆசிரியை மரியா

உலகின் முதலாவது சர்வதேச 'செக்ஸ்' பாடசாலை வியன்னாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்களான காதலர்கள் எப்படி சிறந்த காதலர்களாக இருக்கவேண்டும் என்று கற்பித்துக் கொடுக்கின்றனர் (வாய்க்குள் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாவர்களுக்கு படித்துக் கொடுக்கிறார்களாம்). வியன்னாவில் உள்ள இந்த சர்வதேச செக்ஸ் பாடசாலையில் மாணவர்களிடமிருந்து £ 1,400 தொகையை அறவிடுகிறார்களாம்.

ஈரான் மாணவர்கள் பிரிட்டன் தூதரகத்தை கைப்பற்றினர்


 

ஈரான்நாட்டு பல்கலைமாணவர்கள் இங்கி‌லாந்து அரசை கண்டித்து தலைநகர் டெஹ்ரானில் உள்ள தூதரகத்தில் அத்துமீறி நுழைந்தனர். ஈரான் நாடு அணுகுண்டு தயாரிப்பது குறித்து இங்கிலாந்து அரசு கருத்து ஒன்றை வெளியிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான் நாட்டு பல்கலை மாணவர்கள் ஈரான் அரசு ‌ இங்கிலாந்து நாட்டு தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளி‌யேறச்செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான வாசகங்களை கூறியபடி பேரணியாக சென்ற பல்கலை மாணவர்கள் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் அத்துமீறி நுழைந்தனர். பி்னனர் அங்கிருந்த பாதுகாவலர்கள்மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் ‌கொடியை தீ வைத்து கொளுத்தினர்.

முல்லைத்தீவில் இறப்பர் பயிர்ச்செய்கை


வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் இறப்பர் செய்கை பண்ணுவதற்குரிய சாத்தியக் கூறு கள் அதிகளவு இருப்பதை உறுதி செய்துள்ளதால் முதற்கட்டமாக முல்லைத் தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மூன்று ஏக்கரில் இறப்பர் பயரிடப்படவுள்ளதாக பெருந்தோட்டத் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். மீளக்குடியேறும் மக்களுக்கு நிரந்தர வருவாயை பெற்றுக்கொடுக்கும் ஒரு திட்டமாக வடபகுதிக்குரிய பாரம்பரிய பயிர்ச்செய்கையுடன் இறப்பர் பயிர்ச் செய்கையையும் மேற்கொள்ளக்கூடிய விதத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Friday, November 25

லண்டனில் பிரமாண்டமாய் அமைக்க படும் மாவீரர் துயிலுமில்லம் -அதை காண மக்கள் குதுகலம் .. ! -
பிரித்தானியாவில் இதுவரை இடம்பெற்றிராத வரலாற்று சிறப்பு மிகு மாவீரர் மண்டபம் அமைக்க பட்டு வருகின்றது . தடவையில் நிற்க கூடிய வகையிலான மண்டபமும் ..அத்துடன் ஐயாயிரம் வாகனம்கள் நிறுத்தவல்ல வாகன தரிப்பிடமும் அமைக்க பட்டு வருகின்றன .
அத்துடன் சிறப்பு அம்சமாக தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் எவ்வாறு இருந்தனவோ அவ்வாறான மாதிரி துயிலும் இல்லங்கள் பிரமாண்டமாய் அமைக்க பட்டு வருகின்றன .
 
இவை இதுவரை பிரித்தானியாவில்நிகழ்ந்திராத வகையிலும் தாயகத்தில் இடம் பெற்ற மாவீரர் நிகழ்வுகள் போல இவை இருக்கும் என அந்த மண்டபங்களை அமைத்துவருபவர்கள் தெரிவித்துள்ளனர் .

டிசம்பர் 31க்கு முன்னர் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும்-பாதுகாப்பு அமைச்சு..!

 

சகல கையடக்க தொலைபேசி பாவனையாளர்களும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக தாம் பயன்படுத்தும் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. “இதுதொடர்பான சுற்று நிருபம் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் சகல கையடக்கத் தொலைபேசி இணைப்புச் சேவை வழங்குனர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என ஆணைக்குழுவின் தலைவர் அனுஷா பெல்பிட தெரிவித்தார். டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் தங்களது சிம் அட்டைகளை பதிவு செய்து கொள்ளாத வாடிக்கையாளர்களினது இணைப்பு துண்டிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். புதிய சட்டத்தின் பிரகாரம் ஒரு தனிநபர் 5 சிம் அட்டைகளுக்கு மேல் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகா உண்ணாவிரதத்துக்கு முஸ்தீபு - சிறைத்தண்டனை அளித்த நீதிபதிக்கு பதவியுயர்வு

 
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதப் போராட்டமொன்றுக்கு தயாராகி வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.
 
தனது நோய்க்குச் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை சிறைச்சாலை நிர்வாகம் மறுத்துள்ளமையைக் கண்டித்தே அவர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். நேற்று தொடக்கம் அவர் உண்ணாவிரதத்தில் குதிக்க முடிவு செய்திருந்தபோதும், சிறைச்சாலை அதிகாரிகளின் வேண்டுகோள் காரணமாக அதனைப் பின்போட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

Thursday, November 24

இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைக்கப்பட்டமைக்கான காரணம் என்ன?

November 24th, 2011 11:00 AM

imagesஇலங்கை நாணயத்தின் பெறுமதி குறைந்துவிட்டது என்ற கருத்தைப் நேற்று முன்தினம் இலங்கை அரசு மறுத்திருந்தது.
சர்வதேச நாணய நிதியம் கேட்டுக்கொண்டதற்கிணங்க கடன் அடைக்கவேண்டிய 2.6 பில்லியன் டொலரையும் பாதுகாக்கவே இவ்வாறு குறைத்துள்ளதென்ற கருத்து ஏற்பட்டிருந்ததென AFP செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
திங்கட்கிழமை கொழும்பு, ரூபாயின் பெறுமதியை 3 வீதத்தினால் குறைத்திருந்தது. நிதியமைச்சைப் பாதுகாக்க அண்மைய மாதங்களில் மில்லியன் டொலர்களினைச் செலவழித்தபோதிலும் இக்குறைப்பைச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்தின் கொடுப்பனவு பற்றிய வெளியிடல்கள் வோசிங்ரனைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு

சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச்சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

மொஸாட், சி.ஐ.ஏ. உளவாளிகள் ஈரானில் பிடிபட்டனர்


 

அமெரிக்க சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலிய மொஸாட் உளவாளிகள் எனக் கருதப்படும் 12 பேர் ஈரானில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சி.ஐ.ஏ. (அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு) மற்றும் இஸ்ரேலின் மொஸாட் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை புலனாய்வு செய்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தைகள் இல்லத்தில் 31 கர்ப்பிணிகள் - வெளிநாட்டுக்கும் விற்பனை

 

மொறட்டுவை - ராவணாவத்தை பகுதியில் குழந்தைகள் இல்லம் நடத்திச் செல்வதாகக்கூறி வெளிநாடுகளுக்கு சிறுவர்களை விற்பனை செய்யும் வர்த்தகம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

முற்றுகையிடப்பட்ட இடம் குழந்தைகள் இல்லம் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த இல்லத்தில் 42 குழந்தைகள் மாத்திரமே இருப்பதாக கூறப்பட்டிருந்த போதும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் நடத்திய சோதனையின்போது அங்கு 63 குழந்தைகள் இருந்துள்ளன.

முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை மரணம்


இலங்கையின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை சற்றுமுன்னர் மரணமடைந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்த கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

வீட்டினுள் விழுந்து காயமடைந்துள்ளதனால் கண்டி பொது வைத்தியசாலையில் அனுருத்த ரத்வத்த அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றின்போது உடதலவின பகுதியில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 11 பேரின் படுகொலைகளின் முக்கிய சூத்திரதாரியான ரத்தவத்த, அதிகார வர்க்கத்தின் ஆசிர்வாதம் காரணமாக அந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து கீழ்நீதிமன்றங்களின் உதவியுடன் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தேசிய கீதத்தை தமிழிலும் பாட முடியும்-வாசுதேவ நாணயக்கார

[ புதன்கிழமை, 23 நவம்பர் 2011
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் அல்லது சிங்கள மொழியில் பாட முடியும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய கீதத்தை தமிழ், சிங்கள மொழிகளில் பாடுவது என்ற நியதியில் அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனவும் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் பாடுவதற்கு சில அதிகாரிகள் முயற்சித்த போதிலும் அரசாங்கம் இதற்கு அனுமதிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு மொழிகளுமே தேசிய கீதத்தை பாட முடியும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவது தொடர்பான சர்ச்சைகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 23

தாக்கியது தவறுதான் இருந்தாலும் செய்ய வழியில்லை - மைத்திரிபால

தாக்கியது தவறுதான் இருந்தாலும் செய்ய வழியில்லை - மைத்திரிபால

 

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை அனுமதிக்கக்கூடிய ஒன்று அல்ல என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும் தாக்குதல் நடத்தும் வழக்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியே ஆரம்பித்து வைத்ததாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

அங்கு என்ன நடக்கும் என்று தெரிந்திருந்த எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கையை அசைத்து எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை உசுப்பிட்டதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுவதை தவிர்க்க எதிர்கட்சி சூழ்ச்சி செய்ததன் காரணமாகவே குழப்பநிலை ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.    

அரபுக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான பயிற்சிக் கல்லூரியை உருவாக்க மதவிவகார அமைச்சு இணக்கம்:ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை

Hisbullahஇலங்கையில் இருக்கின்ற அரபுக் கல்லூரிகளில் பணியாற்றுகின்ற விரிவுரையாளர்களுக்கு வீஷேட பயிற்சி வழங்குவதற்காக கல்லூரி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கோரிக்கைக்கு புத்தசாசன மத விவகார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
உலமாக்களை உருவாக்குகின்ற- அல்ஆலிம் பரீட்சைக்கு தயார்ப்படுத்துகின்ற அரபுக் கல்லூரி விரிவுரையாளர்களை, அரச பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்குவதைப் போன்று விஷேட பயிற்சி வழங்கி அதனூடாக சிறப்பான விரிவுரையாளர்களை உருவாக்குவதற்கு ஒரு பயிற்சிக் கல்லூரி அவசியம் என்று அவர் புத்தசாசன மத விவகார அமைச்சினுடைய பாராளுமன்ற குழுவுக்கு ஆலோசனையை முன்வைத்திருந்தார்.

அனாதை இல்லங்களினதும் அனாதை பராமரிப்பு நிறுவங்களினதும் ஒன்றியம் உதயம்

 

M.ரிஸ்னி முஹம்மட்: இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் அனாதை இல்லங்களையும் மற்றும் அனாதை பராமரிக்கும் நிறுவங்களையும் உள்ளடக்கிய ஒன்றியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் உப தலைவர்களுள் ஒருவரும் ஜாமியா நழீமியாவின் பிரதிப்பணிப்பாளருமான அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹமத் lankamuslim.org க்கு தெரிவித்தார்.

வருட இறுதிக்குள் 3000 ஆசிரியர்கள் நியமனம்


அண்மையில் நடத்தப்பட்ட பரீட்சையின்படி 3000 பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனங்கள் இவ்வருட இறுதிக்குள்  வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் பதிவுக்கு புதிய நடைமுறை


மோட்டார் சைக்கிள்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வரும் அடையாள இரட்டை ஆங்கில பதிவு இலக்கங்கள் நிறைவுற்றதன் பின்னர், பதிவு செய்யப்படும் ஒவ்வொரு புதிய மோட்டார் சைக்கிளுக்கும் AAA என ஆரம்பிக்கப்படும் மூன்று ஆங்கில பதிவு இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அரசாங்க தகவல் இணைக்களம் தெரிவித்துள்ளது.

லிபியா இஹ்வானுல் முஸ்லிமின் தலைவராக உஷ்தாத் பஸீர் கிப்தி


புரட்சிக்குப் பிந்திய லிபியாவில் புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் லிபிய இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் தன்னை முழுமையாக தயார்படுத்திவருகின்றது.பெங்காசியில் தமது முதலாவது பகிரங்க மாநாட்டைக் கூட்டிய லிபிய இஹ்வான்கள் ஜமாஅத்தின் தலைவராக உஸ்தாத் பஷீர் கிப்தியை தெரிவு செய்துள்ள அதேநேரம் மஜ்லிஸுஷ் ஷுறாவுக்கான புதிய உறுப்பினர்களையும் தெரிவுசெய்துள்ளனர்.

எழுந்திருக்காததால் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு ஊழியர் மீது அமைச்சர் தாக்குதல்

 
[ புதன்கிழமை, 23 நவம்பர் 2011,
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் அமைச்சர் ஒருவரால் தாக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் வழமையான பிரமுகர்கள் வழியாக உட்சென்ற போது அங்கு முதலில் காணப்பட்ட பாதுகாப்பு ஊழியர் அமைச்சரைக் கண்டு ஆசனத்தை விட்டு எழுந்திருக்காமல் இருந்துள்ளார்.
இதன்போது அமைச்சர் அவரைப் பேசிவிட்டு தொடர்ந்து நடந்து செல்லும்போது அடுத்த இடத்தில் காணப்பட்ட பாதுகாப்பு ஊழியரும் எழுந்திராது ஆசனத்தில் அமர்ந்திருந்துள்ளார்.

அமைச்சரைக் கண்டு அவரும் எழுந்திருக்காததால் ஆத்திரமுற்ற அமைச்சர் அவரைத் தாக்கியதாக விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தாக்குதலுக்கிலக்காகி காயமடைந்த பாதுகாப்பு ஊழியர் பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் facebook account ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எவ்வாறு

நீங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருக்கிறீர்களா? உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.

உங்களுக்கு தெரியாமல் ஒருவர் ஐ டி இல் போய் ஒரு அசிங்கமான சைட்டுடைய பக்கத்தை லைக் செய்தால் என்னவாகும் நிலைமை?

நமக்கு பிடித்தவாறு facebook ஐவடிவமைத்துக் கொள்ளலாம்

இணையத்தில் வந்துடன் தட்டச்சு செய்யும் முதல் தளமாகவும், மிகப்பெரிய சமூக தளமாகவும் Face Book மாறிவிட்டது. இப்பொழுது இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
தற்போது இந்தத்தளத்தினை நாளொன்றிற்கு 500 மில்லியனுக்கும் மேற்ப்பட்டோர் உபயோகப் படுத்துகின்றனர். நாம் பயன்படுத்தும் முகப்புதகத்தின் பயன்பாட்டை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அதன் தோற்றம் ஒரே மாதிரியாக இருப்பது தான் நம்மில் அநேகருக்கு மிகவும் சலிப்பை ஏற்படுத்துகின்றது.
இதை மாற்றும் வகையில் அந்த நிறுவனம் ப்ரொபைல் தீம்ஸை தற்போது அறிமுகபடுத்தி இருக்கிறது. அதன் மூலம் FACEBOOK-இன் தோற்றத்தை மாற்றி அமைக்கலாம். ஆனால் அது மிகவும் குறைவாக உள்ளது. மேலும் அவை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்குமா என்று தெரியாது. அதனால் நாம் விரும்பும் வண்ணம் தீம்களை வடிவமைப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்திற்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.

15 நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கு பயன்படுத்தலாம்: புது வித பற்றரி கண்டுபிடிப்பு

[ செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011,
வெறும் 15ம் நிமிடம் மட்டுமே சார்ஜ் செய்தால் ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்தக்கூடிய கைபேசி பற்றரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குறைந்த நேரம் சார்ஜ் செய்து அதிக நேரம் பயன்பாட்டில் இருக்ககூடிய பற்றரி தயாரிப்பில் வடமேற்கு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததன் மூலம் செல்போன், ஐபோனில் பயன்படுத்தப்படும் வீரியம் கூடிய லித்தியம் ஐயன் பற்றரியை கண்டுபிடித்தனர்.

துருக்கி ஹாஜிகள் மீது சிரியாவில் தாக்குதல் - ஐவர் மரணம்


துருக்கியை சேர்ந்த முஸ்லிம்கள் சவுதி அரேபியாவில் தங்களது புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு 9 பஸ்களில் திரும்பிக் கொண்டிருந்தனர். சிரியாவில் ஹோம்ஸ் நகரம் அருகே பாப்ஹலா பகுதியில் எல்லையை கடக்க முயன்றனர். அப்போது அங்கு சிவப்பு நிற காரில் ராணுவ வீரர்கள் வந்தனர்.

அவர்கள் துருக்கி ஹஜ் பயணிகள் வந்த பஸ்களின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் முன்னாள் சென்று கொண்டிருந்த 2 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இச்சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு துருக்கி பிரதமர் ரீசெப் தயீப் என்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் சிரியா அதிபர் பஷார்-அல்- ஆசாத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், ராணுவத்தின் மூலம் தனது சொந்த மக்களை (முஸ்லிம்களை) கொன்று குவிக்கும் ஆசாத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன.மக்களின் போராட்டத்தை ராணுவத்தின் மூலம் அடக்க முடியாது. எனவே அவரது ஆட்சி தொடர்ந்து நீடிக்க முடியாது. அந்த நாள் விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார்.

எகிப்து இரண்டாம் கட்டம்: இடைக்கால அரசும் ராஜினாமா!

November 23, 2011
எகிப்தில் இரண்டாம் கட்டமாக இராணுவ அரசுக்கு எதிராக போராட்டக் களம் கண்டுள்ள பொதுமக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.


ஹோஸ்னி முபாரக் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட மக்கள் புரட்சியின் விளைவாக, இராணுவம் தலைமையில் இடைக்கால அரசு எகிப்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இராணுவத்துக்குத் தனிப்பட்ட அதிகாரங்கள் வழங்கும் சில சட்டங்களை இடைக்கால அரசு நிறைவேற்றியது.

இலங்கை, மாலைதீவு, இந்தியா இணைத்து பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கத் திட்டம்


இலங்கை, மாலைதீவு, இந்தியா நாடுகளை இணைத்து பயணிகள் கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய கப்பல் சேவை எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படுமென இலங்கைக்கான துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெறுகிறது. இதன் பிரகாரம் முதலாவது கப்பல் சேவை மாலைத்தீவிற்கும், இலங்கைக்கும் இடையில் நடைபெறும்.

அண்மையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் இப்படகு சேவை தொடர்பாக 3 நாடுகளும் அவதானம் செலுத்தியது.

உல்லாச பயணத்துறையை மட்டுமல்லாமல் நாடுகளுக்கு இடையில் நட்புறவை கட்டியெழுப்புதற்கும் இந்த பயணிகள் கப்பல் சேவை பங்களிப்பு செய்யுமென துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

Tuesday, November 22

இலங்கையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புக்கட்டணம் அதிகரிப்பு

 



வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை அதிகரிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புகளுக்கு, நிமிடம் ஒன்றுக்கு விதிக்கப்படும் வரி ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னர் 2 ரூபா அறவிடப்பட்ட நிமிடம் ஒன்றுக்கான வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்கான வரி இனிமேல் 3 ரூபாவாக அறிவிடப்படவுள்ளது. இதன்மூலம் 2 பில்லியன் ரூபாவை மேலதிக வருமானமாகப் பெற முடியும் என்று வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈரானுக்கெதிரான புதிய தடைகள்

 

அணுத்திட்ட சர்ச்சைகள் காரணமாக ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை மேற்குலக நாடுகள் அமுல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானின் அணுத்திட்டம் தொடர்பான கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனாடா ஆகிய நாடுகள் இந்த தடைகளை விதித்துள்ளன.

ஈரான் மீது கணிசமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலரி கிளிண்டன் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் அனைத்து வங்கிகள் உடனான உறவுகளையும் துண்டிப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளதுடன், பெற்றோலிய இராசாயனம், எண்ணெய் மற்றும் வாயு தொழிற்துறைகளுடன் தொடர்புடைய ஏற்றுமதிகளுக்கு கனடா தடைவிதித்துள்ளது.

ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள்! முக்கிய அம்சங்களை பகிரங்கப்படுத்தியது ஆங்கில பத்திரிகை


Slide2ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் வெளியிடப்படாத நிலையில், கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகை ஒன்றில் அதன் முக்கிய பரிந்துரைகள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

பலமான ஆயுதங்கள் தரித்த தீவிரவாதக் குழுவின் பிடியில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் கேட்டிருக்க வேண்டியதில்லை. அவ்வாறு போர் நடவடிக்கையை நிறுத்துவது தீவிரவாதிகள் மூர்க்கம் பெறுவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.

அரச ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வு அல்ல சம்பள மேலதிகக் கொடுப்பனவுதான்

அரச ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வு அல்ல சம்பள மேலதிகக் கொடுப்பனவுதான்

 

November 22, 2011 03:24 pm
 
2012ம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தில் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான 10 வீத சம்பள அதிகரிப்பு அவர்களின் சம்பள மேலதிக கொடுப்பனவாகவே வழங்கப்படும் என சர்வதேச நிதித் திட்டமிடல் சிரேஸ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி பாராளுமன்றில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சிரேஸ்ட அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

TV இல் சொல்லப்பட்ட பட்ஜெட்டும் சொல்லப்படாத பட்ஜெட்டும் -

The documents received by Customs. See how duty imposed!!!!
2012 budget changes

H.S. Code Description Special Commodity Levy
0305.59.10 Maldive fish and substitutes
 therefore
Rs. 250 per kg
0305.59.90 Other - Dried fish Rs. 100 per kg
0713.31.10 Green gram (Moong) Rs. 50 per kg
0713.31.90 Black gram Rs. 100 per kg
0713.39.10 Cowpea Rs. 100 per kg
0805.10.10 Orange - Fresh Rs. 60 per kg
0805.20.10 Mandarins - Fresh Rs. 35 per kg
0806.10 Grapes - Fresh Rs. 120 per kg
0808.10 Apples - Fresh Rs. 45 per kg
0904.20.12 Chillies-crushed or ground Rs. 40 per kg
0909.20.10 seeds of coriander -neither
 crushed nor ground
Rs. 45 per kg
0909.20.20 Seed of corainder crushed
 or ground
Rs. 90 per kg
0909.30 Seed of Cumin Rs. 150 per kg
0909.50 Seed of fennel Rs. 50 per kg
0910.30.10 Turmeric neither crushed nor ground Rs. 200 per kg
0910.30.90 Turmeric -Other Rs. 300 per kg
0910.99.10 Mathe seed Rs. 50 per kg
1008.20.10 Kurakkan (Eleusine coracana spp.) Rs. 75 per kg
1008.20.90 Other / Millet Rs. 75 per kg
1102.90.20 Kurakkan (Eleusine coracana
 spp.) flour
Rs. 150 per kg
1106.10.10 Black gram flour Rs. 200 per kg
1202.20 Ground Nut - Shelled Rd. 100 per kg
1207.50 Mustard seeds Rs. 50 per kg

“மக்களை பாதுகாக்க மனித நேய குண்டுகள்” அமெரிக்கா 1000 BUNKER BUSTER குண்டுகளை UAE அரசிற்கு வழங்கவுள்ளது

அமெரிக்க அரசு (2nd Zionist State) வளைகுடா நாடுகளை இராணுவ மயப்படுத்தும் தனதுநாசகார திட்டத்தின் ஓர் அங்கமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு 1000 நவீனமயப்ப டுத்தப்பட்ட BUNKER BUSTER குண்டு களை வழங்க வாக்களித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இரு தரப்பினராலும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.வோல் ஸ்டிரீட் ஜேர்னலின் வெள்ளிக்கிழமை இதழில் இந்த விவகாரம் ஆதார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி குண்டுகளை இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்கா மீள் வடிவமைத்து அதன் வெடிப்பு சக்தியை இரு மடங்காக அதிகரித்துசுப்பர் பங்கர் பஸ்டர் எனபெயரிட்டது. பதுங்கு நிலைகள், சுரங்கங்கள், நிலத்தின் கீழ் செல்லும் குழாய்கள், போன்றவற்றை தகர்க்க வல்லது இந்த பங்கர் பஸ்டர் குண்டுகள். இரும்பு உருக்கு, கருங்கற்கள், சீமெந்து போன்றவற்றை சிலநொடிகளில்
சின்னாபின்னமாக்கவல்ல குண்டுகள் இவை.




அல்ஹைதாவின் கிறிஸ்தவ ஆதரவாளர் அமெரிக்காவில் கைது

 


அமெரிக்காவில், குண்டு வைக்க முயன்ற, அல்-குவைதா ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து, நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் குறிப்பிடுகையில், "டொமினிக்கன் குடியரசை சேர்ந்தவர் ஜோஸ் பிமென்டல்,27. அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் தாயகம் திரும்பும் போது, அவர்கள் பயணிக்கும் வாகனத்தை, பைப் வெடிகுண்டு மூலம் தகர்க்க திட்டமிட்டிருந்தார்.

அல்-குவைதா ஆதரவாளரான ஜோஸ், கடந்த வாரம், நியூயார்க்கில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த போது, போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 2009ம் ஆண்டு முதல், இவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இவர், பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்பு வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன' என்றார்.

Monday, November 21

லிபியாவில் இஹ்வான் முஸ்லிமின் பகிரங்க மாநாடு


வீழ்ச்சியடைந்த லிபிய ஆட்சியாளர் முஅம்மர் கடாபியின் காலத்தில் கடுமையான அடக்குமுறைக்கு உட்பட்டிருந்த இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம், அதன் முதலாவது பகிரங்க மாநாட்டை நடத்தியுள்ளது.

சென்ற வியாழனன்று லிபியாவின் இரண்டாவது பெருநகரமான பெங்காசியில் தொடங்கிய இம்மாநாடு மூன்று நாட்களாக நடைபெற்றது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எல்லா லிபியக் குழுக்களையும் ஒன்றிணையுமாறு இம்மாநாடு வலியுறுத்தியுள்ளது.

2012 வரவு செலவு திட்டம், சில முக்கிய துளிகள்

2012 வரவு செலவு திட்டம், சில முக்கிய துளிகள்

 

2012ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டப் பிரேரணையை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று பிற்பகல் பாராளுமன்றில் சமர்பித்தார்.

எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றியபோது, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர்.

தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி,

தபால் மாஅதிபரை பதவி நீக்க அமைச்சர் இணக்கம்: பணிப் பகிஷ்கரிப்பு முடிவு!


Post_Office(கொழும்பு செய்தியாளர்)
தபால்மா அதிபர் எம்.கே.பீ. திசாநாயக்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதாக தபால் தொலைத தொடர்புகள் அமைச்சர் ஜீவன் குமாரங்க உறுதியளித்ததையடுத்து கடந்த எட்டு நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை தபால் திணைக்கள ஊழியர்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

தபால்மா அதிபர் எம்.கே.பீ. திசாநாயக்க மீது ஊழல் மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி, அவரை பதவி நீக்க வேண்டுமெனக் கோரி தபால் ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தனர். இப்பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான தபால்கள் விநியோகிக்கப்படாமல் தேங்கியிருந்தன.

க.பொ.த. உயர்தரத்தில் கொரியா மொழியும் சேர்ப்பு




கொரியாவிற்கு வேலை வாய்ப்பினை பெற்றுச் செல்ல முனையும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் கொரிய மொழியையும் ஒரு பாடமாக உள்ளடக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆங்கிலம் சீன ஜேர்மன் பிரெஞ் மற்றும் ஹந்தி மொழிகள் உயர்தர பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியகிழக்கில் இஹ்வானுல் முஸ்லிம்களின் சாம்ராஜியம் - அஞ்சுகிறது இஸ்ரேல்



சிரிய அதிபர் பஷார் அஸதின் வீழ்ச்சி இஸ்ரேலை துடைத்தழிக்கும் ஒரு பேரனர்த்தத்‌தை உண்டாக்கும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு மற்றும் அரசியல் சபைத் தலைவர் ஜெனரல் ஆமூஸ் கிலாட் எச்சரித்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவத்துக்கு சொந்தமான வானொலி சேவை செய்தி வெளியிட்டிருக்கிறது.


எகிப்து, ஜோர்தான் மற்றும் சிரியாவில் செயற்பட்டுவரும் இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் தலைமையில் மத்திய கிழக்கில் உருவாகப் போகும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் விளைவாகவே இந்நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

இஸ்லாத்திற்கெதிரான சிங்கள பேஸ்புக் - ஒன்றுபட்டு எதிர்ப்போம்


පෙරමුණේ රාළගේ අටුවාව (பெரமுன ராள லாகே அடுவாவ) எனும் பெயரில் ஒரு face book Open Group இருக்கிறது (லிங்க் கடைசியில் தரப்பட்டுள்ளது) அதில் முஸ்லிம்களையும் நமது கலாச்சாரங்களைய்யும் கேலி செய்வதல்லாமல் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களை கேலி செய்யும் காடூன்களையும் இட்டுள்ளான் (older post சென்று பார்க்கவும் ) ஆகவே இதை ரிப்போர்ட் செய்து பிளாக் பண்ணுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும் ஆகவே வாருங்கள் அனைவரும் சேர்ந்து இதை பிளாக் பண்ணுவோம்

முதலில் லிங்கை கிளிக் செய்யவும்


அந்தப்பக்கத்தில் கடைசியில் உள்ள Report Group என்பதனை கிளிக் செய்யவும்

பின்னர் வரும் சிறிய திரையில் Hate speech என்பதனை தெரிவு செய்து choose a type என்பதில்

targets a religious group என்பதனை தெரிவு செய்து continue tab பினை கிளிக் செய்யவும்

பின்னர் வரும் திரையில்
report to face book என்பதனை தெரிவு செய்து continue tab பிணை கிளிக்செய்துவிடவும்

http://www.facebook.com/groups/atuwawa/இங்கே கிளிக் செய்யவும்

நாங்களே உலக வல்லரசு, அதனை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்கிறது அமெரிக்கா


எக்காரணம் கொண்டும், உலக வல்லரசு மற்றும் உலகத் தலைவர் என்ற நிலையை, அமெரிக்கா விட்டுக் கொடுக்காது' என, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது, அமெரிக்காவின் புவியியல் முன்னுரிமைகளின்படி, பாதுகாப்புக்கு குந்தகம் நேரிடும்படியான செயல்களுக்கு, அமெரிக்கா ஒரு போதும் இடம் கொடுக்காது. பசிபிக் மண்டலத்தில், அமெரிக்கா படைகளை குவித்து வருகிறது.

இந்நிலையில், உலக வல்லரசு மற்றும் உலகத் தலைவர் என்ற நிலையை, அமெரிக்கா எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்காது.உலக நலன் மற்றும் உலகளாவிய பொறுப்புகளுடன் கூடிய ஒரு நாடு, உலகளாவிய நிலையில் வலுவான ராணுவம் கொண்ட ஒரு நாடு என்ற முறையில், அமெரிக்கா, உலக பாதுகாப்புக்காக தொடர்ந்து செயல்படும்.இவ்வாறு பனெட்டா தெரிவித்தார்.
sources-yarlmuslim

சிங்கள மக்கள் சுகபோகங்களை அனுபவிக்க நினைத்தால் ஒருபோதும் பிரச்சினைக்குத் தீர்வை எட்டமுடியாது!- பிரதமர் ஜயரட்ன

[ ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011,
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பேச்சு மூலம் ஒரு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழர்களுக்கு குறைந்தளவு உரிமைகள், தீர்வுகள் வழங்கப்படுமாயின் அதற்கு நான் ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டேன். நீதியான ஒரு தீர்வு கிடைக்கப் பிரதமர் என்ற வகையில் பாடுபடுவேன் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள 214 இந்து ஆலயங்களின் புனரமைப்புப் பணிகளுக்கான நிதி வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில், இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன் தலைமையில் நடைபெற்றது.

அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் சவப்பெட்டியைத் தயார்படுத்திக் கொள்ளவும்!-மேர்வின் சில்வா எச்சரிக்கை

நாட்டில் அவதூறு ஏற்படும் வகையில் தகவல்களை வெளியிட்டால் ஊடகவியலாளர்கள் சவப்பெட்டி ஒன்றை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய காலச் சூழலில் சில ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் எந்த வகையிலும் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை எனவும் நாட்டின் முக்கிய நபர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் பொய்யான தகவல்களை உருவாக்கி சில ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டொலர்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிடுவதாகக் குறிப்பிட்ட அவர், தமக்கு எதிராகவும் சிலர் இவ்வாறான சேறு பூசல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவற்றுக்கு தாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வேண்டுதலின் பேரில் இணைய உள்ளடக்கத்தை கூகிள் அகற்றியது _


இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இணைய உள்ளடக்கத்தை இலங்கையின் வேண்டுதலின் பேரில் கூகிள் நீக்கியுள்ளது. இப்படியான கோரிக்கையொன்று விடுக்கப்பட்டதாகவும், அதற்கு தாம் இணங்கியதாகவும் கூகிள் அறிவித்துள்ளது. வேறு தொழில்நுட்ப, தொடர்பாடல் நிறுவனங்களைப் போல், சிரமமாக இலங்கை அரசு காரியாலயங்களிலிருந்தும் உலகிலுள்ள நீதிமன்றங்களிலிருந்தும் தமது இணையத்திலிருந்து உள்ளடங்கங்களை நீக்குமாறு கோரிக்கைகள் விடப்படுகின்றன. சில உள்ளடக்கங்கள் அவதூறு ஏற்படுத்துவதாகவும், சில உள்நாட்டு சட்டங்களை மீறுவதாகவும், சில பாலியல் மற்றும் வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாலும் உள்ளடக்கங்கள் நீக்கப்படுகின்றன. நாட்டுக்கு நாடு இச்சட்ட விதிகள் வேறுபட்டு காணப்படுகின்றன. இலங்கை அரசின் கோரிக்கையின் பேரில் கூகிள் தமது உள்ளடக்கங்களை நீக்கினால், கூகிள் இலங்கை அரசியல் பிரசார பகுதிகளையும் நீக்க வேண்டுமெனவும், அவை தமிழர்களைப் பாதிப்பதாகவும் தமிழ் ஆர்வலர் ஒருவர்  கூறினார்.

கூட்டமைப்பு எம். பி உட்பட பலர் ஆளுந்தரப்புக்கு மாறுகின்றனராம்!


2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் ஆளுங்கட்சியில் இணையவுள்ளனர் என தகவல் வெளிவந்துளள்ன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் லங்கா சீ நியூஸ் இணையம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும் பாலானோரே அரசாங்கத்தில் இணையவுள்ளனர் என்றும் இவர்களில் கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களும் அடங்குவர் என்றும் அந்த இணையம் தெரிவித்துள்ளது.அத்துடன் சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இவர்களில் அடங்குவர் என்றும் அந்த இணையம் தெரிவித்துள்ளது.

Sunday, November 20

ரணில் விக்கிரமசிங்க மீது பாலியல் குற்றச்சாட்டு – அதிருப்தி அணியினரால் குற்றப்பத்திரம் கையளிப்பு

[ Sunday, 20 November 2011, 08:27.45 AM. ]

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைமைப் பதவியில் இருந்த அகற்ற முனையும் அணியினரால், அவருக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதுதென்மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணவர்த்தன இந்தக் குற்றப்பத்திரத்தை ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

றோசி சேனநாயக்க, புத்திக பத்திரன, துனேஸ் கங்கந்த, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சந்திரா கங்கந்த, சிரால் லக்திலக, பந்துலால் பண்டாரிகொட, லக்ஸ்மன் லனறோல் மற்றும் பலர் இந்தக் குற்றப்பத்திரத்தில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மதுபானத்தையோ, நாஸ்த்திகத்தையோ, ஓரினச் சேர்க்கையையோ தடை செய்யாது-டியுனீஸிய புதிய அரசாங்கம்- ஏமாந்து போனமுஸ்லிம் சமூகம்

 டியுனீஸிய அரசாங்கம் மதுபானத்தையோ, நாஸ்த்திகத்தையோ, ஓரினச் சேர்க்கையையோ தடை செய்யாது. இவற்றில் ஈடுபடுபவருக்கு தண்டனையும் வழங்காது: முஸலிம்களாகிய நாம் மார்க்கத்தை அலட்டிக் கொள்ளாத வர்களிடம் எதிர் பார்ப்பதை விட இஸ்லாமிய இயக்கம், இஸ்லாமியக் கட்சி, இஸ்லாமிய அரசாங்கம் என்ற பெயரோடு வருபவர்களிடம் பலவற்றை எதிர் பார்த்திருப்பது பழகிப் போன விடயம்.

அந்த வரிசையில் அன்மையில் ‘டியுனீஸியா’வில் ‘அன்னஹ்தா’ மறுமலர்ச்சி கட்சி அரசாங்கத்தை அமைத்ததைத் தொடர்ந்து ‘இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் சாதகமாக பல விடயங்கள் நடக்கப் போகிறன’ என முஸ்லிம்களில் பலரும் எதிர்பார்த்தனர். நமது தமிழ் பேசும் முஸ்லிம் உலகமும் இது பற்றி எழுதவும் எதிர் பார்க்கவும் தவறவில்லை.

பேராதனை பல்கலைக்கழக மாணவிகள் மீது அரை நிர்வாண பகிடிவதை

போரதனைப் பல்கலைக்கழகத்தில் பெண் மாணவிகள் மீது அரை நிர்வாண பகிடி வதை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதன்போது முதலாம் ஆண்டு மாணவிகளை இரண்டாம் ஆண்டு சக மாணவிகள் இவ்வாறு பகிடி வதைக்கு உள்ளாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் ஆண்டைச் சேர்ந்த பத்து மாணவிகளை இரண்டாம் ஆண்டு மாணவிகள் இவ்வாறு அரை நிர்வாணப்படுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.

பலஸ்தீனுக்கு இந்தியா 51 கோடி ரூபா நிதியுதவி


பலஸ்தீனுக்கு 2011-12 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதியுதவியாக ரூ.51 கோடியை இந்தியா அளித்துள்ளது. இந்த நிதியுதவிக்கான காசோலையை "ஐக்கிய நாடுகளின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான அமைப்பிடம்', இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ. அகமது வெள்ளிக்கிழமை அளித்தார். ஐ.நா. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அமைப்பின் ஆணையாளர் ஃபிலிப்போ கிராண்டியிடம் இக்காசோலை கையளிக்கப்பட்டது.