Monday, November 21

கூட்டமைப்பு எம். பி உட்பட பலர் ஆளுந்தரப்புக்கு மாறுகின்றனராம்!


2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் ஆளுங்கட்சியில் இணையவுள்ளனர் என தகவல் வெளிவந்துளள்ன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் லங்கா சீ நியூஸ் இணையம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும் பாலானோரே அரசாங்கத்தில் இணையவுள்ளனர் என்றும் இவர்களில் கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களும் அடங்குவர் என்றும் அந்த இணையம் தெரிவித்துள்ளது.அத்துடன் சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இவர்களில் அடங்குவர் என்றும் அந்த இணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment