Sunday, November 20

ரணில் விக்கிரமசிங்க மீது பாலியல் குற்றச்சாட்டு – அதிருப்தி அணியினரால் குற்றப்பத்திரம் கையளிப்பு

[ Sunday, 20 November 2011, 08:27.45 AM. ]

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைமைப் பதவியில் இருந்த அகற்ற முனையும் அணியினரால், அவருக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதுதென்மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணவர்த்தன இந்தக் குற்றப்பத்திரத்தை ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

றோசி சேனநாயக்க, புத்திக பத்திரன, துனேஸ் கங்கந்த, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சந்திரா கங்கந்த, சிரால் லக்திலக, பந்துலால் பண்டாரிகொட, லக்ஸ்மன் லனறோல் மற்றும் பலர் இந்தக் குற்றப்பத்திரத்தில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குற்றப்பத்திரத்தில் ரணில் விக்கிரமசிங்க மீது, இளம்நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருபாலுறவுக்கு நிரப்பந்தித்தாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவை ரணில் விக்கிரமசிங்க ஒருபாலுறவுக்கு நிர்ப்பந்தித்தாகவும், அவர் மறுத்துவிட்டதால், கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அவரைத் தண்டித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா அமைசர்கள் மகிந்தானந்த அளுத்கமகேயும்,மேர்வின் சில்வாவும் பகிரங்க தொலைகாட்சி விவாதம் ஒன்றில், ஐதேக தலைவர் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்குவதாக கூறிய தகவல்களும் குற்றப்பத்திரத்தில் சான்றாக இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment