Friday, June 29

புறக்கோட்டை வர்த்தகரிடம் 21 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற பொலிஸார் இருவர் கைது


புறக்கோட்டை பகுதியி லு ள்ள முஸ்லிம் வர்த்தகரொருவரிடம் 21 இல ட்சம் ரூபா கப்பம் பெற்ற குற்றச் சா ட் டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் மோசடி தவி ர்ப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதக ரை யும் பொலிஸ் கான்ஸ்டபிளையும் ௭திர் வரும் 06ம் திகதி வரை விளக்க மறிய லில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவி ட்டுள் ளது.
இந்த வர்த்தகரிடம் கப்பப் பணம் பெற்ற குறி த்த இரு பொலிஸாரையும் நேற்று முன் தினம் காலை கைது செய்த இரகசிய பொலி ஸார் அவர்களை புதுக்கடை நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். அதன் போதே நீதிமன்றம் அவர்களை விளக் கமறி யலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய ‘இஸ்லாமிய அரசியல்’ நூல் தமிழில் வெளிவருகிறது

அல்லாமா யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய இஸ்லாமிய அரசியல் நூல் தமிழில் மொழிமாற்றப்பட்டு வெளியிடப்படவுள்ளது. இஸ்லாமிய அரசியல் என்னும் தலைப்பில் தமிழுக்கு மொழிமாற்றப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீடு எதிர்வரும் வியாழகிழமை இல. 77, தெமடகொட வீதி, கொழும்பு 09இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மேற்படி இஸ்லாமிய அரசியல் நூல் வெளியீடு -நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி -  Front for justice and peace ( FJP) என்ற அமைப்பு மேற்கொண்டுள்ளது . இந்த வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம் .எல் .ஏ. காதர் அவர்களினால் நிகழ்த்தப் படவுள்ளதுடன் , நூல் அறிமுக உரையை இஸ்லாஹியா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம் .எச் .எம் .உவைஸ் (இஸ்லாஹி) நிகழ்த்தவுள்ளார் .

மூதூரில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு பிரதமருக்கு யோகேஸ்வரன் எம்.பி கடிதம்- கலிமா முழங்கி ஆரம்பித்த முஸ்லிம் காங்கிரஸ் எங்கே ?



திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் உள்ள 3ம் கட்டை மலை அருகாமையில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை தடுக்குமாறு, பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் பௌத்த மதவிவகார அமைச்சரும், பிரதமருமான தி.மு. ஜயரத்னவுக்கு அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய அரசாங்கத்தில் வடக்கு கிழக்கு மண்ணில் இவ்வாறான பௌத்த மத வணக்கஸ்தலங்கள் திட்டமிட்டு ஸ்தாபிக்கும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

சந்திரிக்காவின் நடவடிக்கைகளினாலேயே சமாதான முயற்சிகள் தாமதமாகின: ராஜித சேனாரட்ன



முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நடவடிக்கைகளினாலேயே சமாதான முயற்சிகள் கால தாமதமாகியதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தியிருக்காவிட்டால், சமாதானத்தை எட்டியிருக்க முடியும்.
நாட்டில் தேர்தல் அதிகாரத்தின் மூலம் ஆட்சி பீடமேறிய அரசாங்கத்தை நீங்கள் காலில் இழுத்தீர்கள். ரணிலின் சமாதான முயற்சிகளுக்கு தடையேற்படுத்தி இருக்கா விட்டால் முன்னரே நாட்டில் சமாதானம் ஏற்பட்டிருக்கும் என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Thursday, June 28

ஜம்இய்யத்துல் உலமா சபைக்குள் பிளவுகளை உருவாக்க சதி - ரிஸ்வி முப்தி கவலை தெரிவிப்பு


இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்குள் பிளவுகளை உருவாக்கும் முயற்சிகள் தற்பொது நடைபெறுவதாகவும், இதனை உலமாக்கள் தமது பலமான ஒற்றுமையின் மூலம் முறியடிக்க வேண்டுமெனவும் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெஹ் ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.



கண்டியில் நடைபெற்றுள்ள உலமா சபையின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கடந்த 88 வருடங்களாக அகில உலமா சபை பாரிய சமய, சமூகு பணிகளை முன்னெடுத்து வருகிறது. உலமா சபை ஏனைய சமூகங்களுக்கும் முன்மாதிரியாக வாழ வழிகாட்டிய ஒரு அமைப்பாகும்.

நாட்டில் இன்று பல சதிமுயற்சிகள் நடைபெறுகின்றன. எமது அகீதாவைநாம் பாதுகாக்கவேண்டும். அவதானமாக நமது பணியை முன்னெடுக்க வேண்டும். உலமாக்கள் சமூகுத்தை கட்டியெழுப்ப வேண்டும். ஜம்மியத்துல் உலமா சபையானது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அடிமைப்பட்டதல்ல. இது அனைவருக்கும் வழிகாட்டும் அமைப்பாகும் எனவும் மேலும் கூறினார்.

இலங்கை முஸ்லிம்களின் இன விகிதாசாரத்தை அரசாங்கம் மறைத்துவிட்டதா..?

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு பற்றிய இறுதி அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விபரங்களும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.


இருந்தபோதும் இலங்கையில் வாழும் பல்லின சமூகங்களின் எண்ணிக்கையோ அல்லது மத ரீதியிலான விபரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.

சனத்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் போது மதம், இனம் மொழி பற்றிய விபரங்களுமே சேகரிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இலங்கையில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் இலங்கையின் சனத்தொகையில் இரண்டாமிடத்தை அடைந்திருப்பதாகவும் உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறனதொரு நிலையில் அரசாங்கம் முஸ்லிம்களின் உள்ளிட்ட எந்தவொரு சமூக, சமய பிரிவினரினதும் எண்ணிக்கையை வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாத்தின் சுவை கெடுக்கும் மேலதிக மசாலாக்கள்



ஹஜ்ஜுல் அக்பர்


மனைவி : என்னாங்க ஒற்றையா ஒரு பார்ஸலை மட்டும் வாங்கியிருக்கீறீங்க..... நூடில்ஸுக்கு கறி, புளி, மசாலா ஒன்டும் வாங்கலியா?

கணவன்: இன்னிக்கு ஒங்க கையால கறி, புளி, மசாலான்னு எதுவும் போட்ற வாணாம். எல்லாம் சேர்ந்ததா இப்போ ஓறே பார்ஸல்ல அடைச்சி விக்கிறாங்கல்ல... பார்ஸலைப் பிரிச்சி அப்படியே ஆக்கிடுங்க். எல்லாம் சரியாயிடும்.

இதைப் போன்றுதான் உப்பு, உரைப்பு, மசாலா அனைத்தையும் மேலதிகமாகப் போட்டு மார்க்கத்துக்கு சுவையூட்ட பலர் எத்தனிக்கிறார்கள்- அல்லாஹ் தேவையான சுவைகள் அனைத்தையும் மார்க்கத்தினுள் அளவாக வைத்து ஓரே பொதியாகத் தந்திருக்கின்ற போது அனைத்துச் சுவைகளும் பொருத்தமான அளவில் சேர்க்கப்பட்டமார்க்கம் இஸ்லாம். ஆனால், அந்த் சுவை சிலருக்குப் போதாமால் இருக்கிறது.

சவூதி அரேபியாவில் புத்தரை வழிபட சுதந்திரம் இல்லை - ரஞ்சன் ராமநாயக்க எம்.பி.

அரேபியாவில் தொழில்புரிந்து வரும் இலங்கை தொழிலாளர்கள் தமது மத வழிப்பாடுகளில் ஈடுபடும் சுதந்திரம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அண்மையில் இலங்கையை சேர்ந்த தொழிலாளரி ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வழிப்பட்டு கொண்டிருந்த போது, அங்கு சென்ற சவூதி காவற்துறையினர், அவரை கொடூரமான முறையில் கைதுசெய்து, இடையூறு செய்துள்ளனர். சவூதியில் தொழில் புரியும் இலங்கை தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும், இந்த துரதிஷ்டவசமான சம்பவம் குறித்து ராமநாயக்க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.