Thursday, February 28

ஹலால் சர்ச்சை முஸ்லிம் நாடுகளின் உறவை சீர்குலைக்கும்:அலவி






ஹலாலை ஒரு பிரச்சினையாக ஏற்படுத்துவதானது சர்வதேச வர்த்தகத்தை பாதிப்படையச் செய்யும் எனவும்  இது முஸ்லிம் நாடுகளுடனான இலங்கையின் உறவை சீர்குலையச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சதியே என மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா விடிவெள்ளிக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தீவிரவாத போக்குள்ள மூன்றாம் தரப்பினரே இவ்வாறான தேவையில்லாத விடயங்களை பிரச்சினையாக உருவாக்கியுள்ளனர்.

ஹலால் ஒரு பிரச்சினையே கிடையாது. எமது முன்னோர்கள் இவ்வாறு ஹலால் தொடர்பில் இலட்சினைகளையோ சான்றிதழ்களையோ வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு ஹலால் எது? ஹராம் எது? என்பது நன்றாகவே தெரியும். அவர்கள் ஹலாலான உணவுகளையே உட்கொண்டனர். தற்போது முஸ்லிம்கள் ஹலாலான உணவுகளையே பெற்றுக்கொள்கின்றனர்.

தீவிரவாதப் போக்குடையவர்கள் எதையாவது பிரச்சினையாக ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஹலாலை பிரச்சிகையாக மாற்றியுள்ளனர். அவர்கள் நாட்டில் ஏதாவது  பிரச்சினைகள் இருக்க வேண்டும் என்பதற்காக குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஹாலுக்கு பெறப்பட்ட நிதி எவ்வாறு செலவழிக்கப்பட்டது என விளக்கமளிக்க:ஓமல்பே







ஹலால் சான்றிதழ் மூலம்  கடந்தகாலங்களில் பெறப்பட்ட நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து  ஊடகங்கள்  வாயிலாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வெளிப்படுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தெரியாத்தனமாக ஹலால் எனும் வரியை செலுத்தி வந்துள்ள சிங்கள பெளத்தர்களுக்கு அது தொடர்பில் தெரிந்து கொள்ள பூரண உரிமை உள்ளது. எனவே அது தொடர்பில் உலமா சபை வெளிப்படுத்த வேண்டும்.
ஹெல உறுமய உள்ளிட்ட எந்தவொரு பெளத்த அமைப்பும் ஹலாலை எதிர்க்கவில்லை. எனினும் ஹலாலை எம்மீது திணிப்பதையே நாம் எதிர்க்கிறோம். இலங்கையை இன்னுமொரு பாகிஸ்தானாகவோ அல்லது ஆப்கானிஸ்தானாகவோ மாற்றுவதற்கு இடமளிக்கமுடியது.

இது சிங்கள பெளத்த நாடு. பெளத்தர்களின் நல்லெண்ணம் காரணமாகவே  இங்கு  முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது என தெரிவித்துள்ளார்.

ஹலால் முறையிலேயே உற்பத்தி - பாராளுமன்றத்தில் iசிங்கள வர்த்தகர்கள் திட்டவட்டம்


ஹலால் முறையிலேயே தமது உற்பத்திகளை தொடர்ந்து மேற்கொள்வோமெனவும் அதனை எவரும் தடுத்துநிறுத்த முடியாதெனவும் நாட்டின் பிரபலமான  உற்பத்தி நிறுவனங்களும், அவற்றின் முதலாளிகளும் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று வியாழக்கிழமை, 28 ஆம் திகதி நடைபெற்ற ஹலால் தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உபகுழுவின் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் நடைபெற்றுள்ள இக்கூட்டத்தில் முஸ்லிம் அரசியலவாதிகளான பௌஸி, ஹக்கீம், றிசாத், அதாவுல்லா ஆகியோரும் பங்குகொண்டுள்ளனர். இதன்போது சிங்கள வர்த்தகர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,