Thursday, June 28

ஜம்இய்யத்துல் உலமா சபைக்குள் பிளவுகளை உருவாக்க சதி - ரிஸ்வி முப்தி கவலை தெரிவிப்பு


இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்குள் பிளவுகளை உருவாக்கும் முயற்சிகள் தற்பொது நடைபெறுவதாகவும், இதனை உலமாக்கள் தமது பலமான ஒற்றுமையின் மூலம் முறியடிக்க வேண்டுமெனவும் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெஹ் ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.



கண்டியில் நடைபெற்றுள்ள உலமா சபையின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கடந்த 88 வருடங்களாக அகில உலமா சபை பாரிய சமய, சமூகு பணிகளை முன்னெடுத்து வருகிறது. உலமா சபை ஏனைய சமூகங்களுக்கும் முன்மாதிரியாக வாழ வழிகாட்டிய ஒரு அமைப்பாகும்.

நாட்டில் இன்று பல சதிமுயற்சிகள் நடைபெறுகின்றன. எமது அகீதாவைநாம் பாதுகாக்கவேண்டும். அவதானமாக நமது பணியை முன்னெடுக்க வேண்டும். உலமாக்கள் சமூகுத்தை கட்டியெழுப்ப வேண்டும். ஜம்மியத்துல் உலமா சபையானது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அடிமைப்பட்டதல்ல. இது அனைவருக்கும் வழிகாட்டும் அமைப்பாகும் எனவும் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment