Thursday, November 24

தேசிய கீதத்தை தமிழிலும் பாட முடியும்-வாசுதேவ நாணயக்கார

[ புதன்கிழமை, 23 நவம்பர் 2011
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் அல்லது சிங்கள மொழியில் பாட முடியும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய கீதத்தை தமிழ், சிங்கள மொழிகளில் பாடுவது என்ற நியதியில் அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனவும் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் பாடுவதற்கு சில அதிகாரிகள் முயற்சித்த போதிலும் அரசாங்கம் இதற்கு அனுமதிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு மொழிகளுமே தேசிய கீதத்தை பாட முடியும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவது தொடர்பான சர்ச்சைகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment