Tuesday, November 22

இலங்கையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புக்கட்டணம் அதிகரிப்பு

 



வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை அதிகரிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புகளுக்கு, நிமிடம் ஒன்றுக்கு விதிக்கப்படும் வரி ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னர் 2 ரூபா அறவிடப்பட்ட நிமிடம் ஒன்றுக்கான வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்கான வரி இனிமேல் 3 ரூபாவாக அறிவிடப்படவுள்ளது. இதன்மூலம் 2 பில்லியன் ரூபாவை மேலதிக வருமானமாகப் பெற முடியும் என்று வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment