Sunday, June 30

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது: ஹக்கீம்


hakeem அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அதன்  தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கண்டியில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இனப் பிரச்சினைக்கு தீர்வு காண குறிப்பாக 13ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தை மேற்கொள்ள  அரசாங்கத்தால் இந்த பாராளுமன்ற தெரிவு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்படுகிறது.
அதேவேளை 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகிறது என்று கொள்ள முடியாது என்று முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முண்ணனி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இத் தெரிவுக் குழுவில் பங்கேற்காது என ஏற்கனவே அறிவித்துள்ளமை   குறிப்பிடதக்கது
இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள வடக்கு தேர்தலில் தமது கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாகவும் ஹக்கீம்  மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment