Saturday, June 29

ஜனாதிபதியின் ஆலோசனை தனக்கு பொருந்தாது -13 தொடர்பான நிலைப்பாட்டை விட்டு கொடுக்கும் எண்ணம் இல்லை -வாசுதேவ



ஜனாதிபதியின் ஆலோசனை தனக்கு பொருந்தாது -13 தொடர்பான  நிலைப்பாட்டை விட்டு கொடுக்கும் எண்ணம் இல்லை -

ஜனாதிபதியினால், அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருக்குமாறு வழங்கிய ஆலோசனை தனக்கு பொருந்தாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
மாகாண சபை உள்ளிட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டை விட்டு கொடுக்க தனக்கு எந்த எண்ணமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
 
தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்க போவதாகவும் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் தொடர்புடையவர் அல்ல எனவும் தான் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணிய போவதில்லை எனவும் அத்துடன் அரசாங்கத்தை சிக்கிலில் மாட்டிவிட போவதில்லை எனவும் வாசுதேவ கூறியுள்ளார்.
 
மாகாண சபைகளின் அதிகாரங்கள் மற்றும் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் எதிர்காலத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் தான் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க போவதில்லை என தெரிவித்துள்ள அவர், எந்த காரணம் கொண்டு அரசாங்கம் தோல்வியடைய இடமளிக்க போவதில்லை எனவும் இது கூலையும் தாடியையும் பாதுகாத்து கொள்ளும் செயற்பாடு எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment