Saturday, June 29

13 வது திருத்தத்திற்கு எதிரான பேரணி மேற்கொள்ளப்போகும் பௌத்த பிக்குகள்

buddhist monkஇலங்கையின் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை ஒழிக்கக் கோரி ஆயிரக்கணக்கான பெளத்த பிக்குகள் எதிர்வரும் ஜூலை 2 ல் கொழும்பில்பாரிய பேரணியொன்றை நடாத்தவுள்ளனர்.
மகரகமவில் நடைபெறவுள்ள இந்த பேரணியை “மாகாண சபைகள் ஒழிக்கும் தேசிய இயக்கம்” எனும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பேரணிக்கு நாடு முழுவதிலும் இருந்து 3,000-4,000 பௌத்த பிக்குகள் கலந்துகொள்ளவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அஸ்கிரிய மற்றும் மகா சங்க தேரர்களை இதில் கலந்துகொள்ளுமாறு இந்த பேரணியை ஏற்பாடு செய்த குழுவின் உருப்பினர் ராஜவற்ற வப்பா தேரர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன் இந்த 13 வது திருத்தம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று ராஜவற்ற வப்பா தேரர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment