கடந்த ஞயிற்றுக்கிழமை (28)ம் திகதி மருதாணை
டவர் அரங்கில் வெல்லம்பிட்டிய அகதியத்துல் தாருல்சலாம் அகதியா பாடசாலை
மாணவர்களது பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு
உரையாற்றும்போதே முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும் ஐனாதிபதி
சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு தெரவித்தார்.
Tuesday, April 30
‘பெசன் பக்’ வழக்கை வாபஸ் பெறச் சொன்னதாக என் மீது பழி சுமத்துகின்றனர்: பைசர் முஸ்தபா
Labels:
இலங்கை செய்திகள்
கொழும்பில் இனவாதத்திற்கு எதிராக மேதின ஊர்வலம்; தமிழ் பேசும் மக்களுக்கு மனோ அழைப்பு!
இந்த ஊர்வலத்திலும், கூட்டத்திலும் கொழும்பில் வாழும் தமிழ், முஸ்லிம்
மக்கள் அணி திரண்டு கலந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்
மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
Labels:
இலங்கை செய்திகள்
மின் கட்டண பட்டியலுக்கு 20 சதவீத கட்டண குறைப்பு - ஜனாதிபதி நாளை மே தினத்தில் அறிவிப்பார்
April 30, 2013 03:14 pm
புதிய மின் கட்டண உயர்வை 20 சதவீதத்தால் குறைக்குமாறு ஜனாதிபதி மின்வலு
மற்றும் எரிசக்தி அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி
தெரிவித்துள்ளது.
அதன்படி 150 யுனிற்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவோரின் மின் கட்டண பட்டியலுக்கு 20 சதவீத கட்டண குறைப்பு மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை நாளையதினம் இடம்பெறும் மே தின கூட்டத்தில் விடுப்பார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி 150 யுனிற்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவோரின் மின் கட்டண பட்டியலுக்கு 20 சதவீத கட்டண குறைப்பு மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை நாளையதினம் இடம்பெறும் மே தின கூட்டத்தில் விடுப்பார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை செய்திகள்
இலங்கை பெளத்தர்களுக்கு சொந்தமானதல்ல : முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்ற கருத்தில் உண்மையில்லை என
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார்.
பட்டமுல்ல கந்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சில அரசியல்வாதிகள் இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என
பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனினும், இதில் எவ்வித உண்மையுமில்லை.
சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இன,மத,குல பேதங்களை களைந்து சமாதானத்துடன் வாழ அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . என தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை செய்திகள்
இனவாதத்துக்கு எதிரான மே தினத்தில் அணி திரள்வீர் - அஸாத் சாலி அழைப்பு

உழைப்பாளிகளின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமானால் நாட்டில் இனவாதம்
மதவாதம், வர்க்கபேதம் அற்ற சகலரும் சம அந்தஸ்தோடு வாழும் சூழல்
உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இன்று துரதிஷ்டவசமாக ஆட்சியிலும்
அதிகாரத்திலும் இருப்பவர்களே மக்கள் மத்தியில் இந்த பேதங்களைத்
தூண்டுபவர்களாகவும், இந்த பேதங்களுக்காக உழைப்பவர்களின்
அனுசரணையாளர்களாகவும் இருக்கின்றனர். இதனைத் தட்டிக் கேட்பவர்களும், இந்த
பிற்போக்குவாத சிந்தனைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களும்
பயங்கரவாதிகளாகப் பட்டியலிடப்படுகின்றனர். நாட்டில் கொலைகாரர்களையும்
கொள்ளையர்களையும் சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு, மக்கள்
உரிமைகளுக்காகவும், மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயங்களுக்காகவும் குரல்
கொடுப்பவர்கள் மீது பொலிஸார் ஏவி விடப்பட்டுள்ளனர்.
Labels:
இலங்கை செய்திகள்
தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் கலந்துரையாடல்
Labels:
இலங்கை செய்திகள்
முஸ்லிம் அமைப்புக்களுடன் அமெரிக்க தூதுவர் என்ன பேசினார்? விசாரணை ஆரம்பம்
தூதுவர்களுக்காக ஒழுக்க நெறிகளை மீறி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்
மிச்சேல் சீசோன், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் அமைப்புகளின் 25
பிரதிநிதிகளை கொழும்பு அழைத்து ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம்
குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த முஸ்லிம் பிரதிநிதிகளை, அமெரிக்க தூதுவர் சந்திக்கவிருந்தமை தொடர்பான
தகவல்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் கிடைத்திருக்கவில்லை. முஸ்லிம்
பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திய, தூதுவர் கிழக்கில் முஸ்லிம்களுக்கு
இருக்கும் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்துள்ளார்.
அமெரிக்க தூதுவர் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இடையிலான நடைபெற்ற
ரகசிய பேச்சுவார்த்தை மூலம் தூதுவர், வெளிநாட்டு தூதுவர்கள் தொடர்பான 1961
ஆம் ஆண்டு வியன்னா இணக்கப்பாட்டை மீறியுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத்
தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
Labels:
இலங்கை செய்திகள்
பாகிஸ்தானிலிருந்து வந்த கருத்தடை ஊசி மருந்தின் பின்னணி குறித்து ஆராயவும்..!- பொது பல சேனா
இல்லாவிட்டால் சிங்கள இனத்தை அழிக்கும் சதித்திட்டம் வெற்றி பெற்று விடுமென்று அவ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Labels:
இலங்கை செய்திகள்
மின் கட்டணங்களை குறைக்க அரசு திட்டம்?
மின்சாரக்
கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக மின்வலு
எரிசக்தி அமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிராக எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியின் சில உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதமருக்கு கலாநிதி பட்டம் - முஸ்லிம்களும் பாராட்டி கௌரவம்
Labels:
இலங்கை செய்திகள்
மின் கட்டண உயர்வை கண்டித்து தேசிய எதிர்ப்பு பேரணி
April 30, 2013 08:52 am
மின் கட்டண உயர்வை கண்டித்து மே மாதம் 9ம் திகதி தேசிய எதிர்ப்பு பேரணி
ஒன்றை நடாத்தப் போவதாக மின் கட்டண உயர்வுக்கு எதிரான பொது மக்கள் அமைப்பு
தெரிவித்துள்ளது.
இதுவரையில் தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள் என 150 நிறுவனங்கள் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளதாக அமைப்பின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
இது குறித்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதேவேளை, மின் கட்டண உயர்வை கண்டித்து நேற்று (29) மாலை கந்தான பகுதியிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதுவரையில் தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள் என 150 நிறுவனங்கள் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளதாக அமைப்பின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
இது குறித்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதேவேளை, மின் கட்டண உயர்வை கண்டித்து நேற்று (29) மாலை கந்தான பகுதியிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
Labels:
இலங்கை செய்திகள்
இலங்கை மீன்களுக்கு ஐரோப்பாவில் தடை வருமா..?
(Tm) இலங்கை கடல் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும்
சட்டவிரோதமான கட்டுப்பாடில்லாத களவான மீன்பிடித்தல் காரணமாக இலங்கையின்
மீன் ஏற்றுமதிக்கு எதிராக தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம்
யூன் 26 இல் தீர்மானிக்கவுள்ளது என அதிகாரிகள் கூறினர்.
ஆயினும், இந்த பிரச்சினைகள் தொடர்பாக பல நல்ல நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு இருப்பதனால் மீன்பிடி அமைச்சு நல்ல முடிவை
எதிர்பார்த்துள்ளது என்று மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
Labels:
இலங்கை செய்திகள்
உயிருக்கு அச்சுறுத்தல்! அசாத் சாலி தலைமறைவு
“என்னை
கைதுசெய்வதற்கு முயற்சிக்கின்றனர். குறுந்தகவல் அனுப்பியதாக
குற்றஞ்சுமத்துகின்றனர். பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குவதாக கூறுகின்றனர்.
அல்கைதா என என்னைக் கூறுகின்றனர். பல பெயர்களில் என்மீது
குற்றஞ்சுமத்துகின்றனர். பல வழிகளிலும் என்னைக் கைதுசெய்வதற்கு இந்த
அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
Labels:
இலங்கை செய்திகள்
தம்புள்ளை பள்ளிவாசலுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் உதவி உண்டு : ஜனக பண்டார
இது தொடர்பாக கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்சவிடம் வினவிய போது பள்ளிவாசல் அகற்றப்பட மாட்டாது என்று தன்னிடம்
தெரிவித்துள்ளதாக காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகொன்
தெரிவித்தார்.
Labels:
இலங்கை செய்திகள்
Monday, April 29
குழந்தைகள்,பெண்கள் விற்பனை செய்யப்படும் உலகின் பிரதான நாடாக இலங்கை?
பெண்கள், குழந்தைகள் விற்பனை செய்யப்படும் உலகின் மிகப் பிரதானமான நாடாக
இலங்கை திகழ்கின்றது என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீப
மனமேந்திர தெரிவித்துள்ளார்.
கடற்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் தங்காலை கரையின் ஊடாக ட்ரோலர் படகைப் பயன்படுத்தி 35 நாட்களில் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களைக் கடத்துகின்றனர்.
கடற்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் தங்காலை கரையின் ஊடாக ட்ரோலர் படகைப் பயன்படுத்தி 35 நாட்களில் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களைக் கடத்துகின்றனர்.
வரலாற்றுக் காலத்தில் காணப்பட்ட அடிமைச் சேவக முறைமை இன்று சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையாக மாற்றமடைந்துள்ளது.
இந்தியாவில் இன்னமும் அடிமைச் சேவக முறைமை காணப்படுகின்றது.
மனித உயிருக்கான மரியாதை அற்றுப் போயுள்ளது.
Labels:
இலங்கை செய்திகள்
அரசுக்கு எதிராக கடும் தீர்மானம் மேற்கொள்ள போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு!
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் மே மாதம் 7ம்
திகதி கடுமையான தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அன்றைய தினம் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெறும் கட்சியின்
உயர்ப்பீடக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ரஜாப்டீன்
குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து
உரிய தீர்வு கிடைக்காமையை ஆட்சேபித்தே இந்த தீர்மானம்
மேற்கொள்ளப்படவுள்ளதாக ரஜாப்டீன் குறிப்பிட்டார்
Labels:
இலங்கை செய்திகள்
வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களை இணைக்கும் புதிய பொருளாதார வலயம்!

விவசாயம். கடற்றொழில் உற்பத்திகள் ஆகியவற்றிற்கு அதிக விலையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மதவாச்சி நகரை கேந்திரமாக வைத்து, புதிய பொருளாதார மத்திய நிலையம் ஆரம்பிக்கப்படுவதுடன், உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக பல்வேறு வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளது.
பல்வேறு காரணங்களினால் செயலிழந்துள்ள மதவாச்சி, பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகள், துரிதப்படுத்தப்படவுள்ளதாக மதவாச்சி பிரதேச சபையின் தலைவர் கே.சி.மென்டிஸ் தெரிவித்தார். வடமத்திய மாகாண சபை இதற்கான நிதியை வழங்கியுள்ளது.
Labels:
இலங்கை செய்திகள்
இவ்வாண்டு சர்வதேச குர்ஆன் போட்டிகளுக்கு பத்து பேர் தெரிவு
தேசிய மட்டத்தில் நடைபெற்ற அல்குர்ஆன்
போட்டிகளில் பல பிரிவுகளிலும் வெற்றியீட்டிய பத்து மாணவர்கள் இவ்வாண்டு
சர்வதேச குர்ஆன் போட்டிகளுக்கு செல்லவுள்ளதாக முஸ்லிம் சமய
பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல் நழீமி
தெரிவித்தார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்
திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசய மட்டத்திலான அல்குர் ஆன் போட்டிகள் இம்
முறை காத்தான்குடியில் நடைபெற்றது.
காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ்
அறபுக்கல்லூரி மற்றும் ஸித்தீக்கியா அறபுக்கல்லூரி, காத்தான்குடி
ஹிஸ்புல்லா மண்டபம் என்பவற்றில் இப்போட்டிகள் நடை பெற்றன.
இந்த போட்டி முடிவுகள் பின்வருமாறு
Labels:
இலங்கை செய்திகள்
அரசாங்கத்தினுள் இருந்த பிளவு வெளிச்சத்திற்கு வந்ததுவிட்டது - கஜந்த கருணாதிலக
அரசாங்கத்தினுள் பிளவு ஏற்பட்டுள்ளமை மின் கட்டண அதிகரிப்பின் மூலம்
வெளிப்படையாக தெரியவந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ஒன்று கூறினால் தற்போதைய எரிசக்தி அமைச்சர் அதற்கு எதிர்மாறாக கூறுகிறார். இதன் மூலமாக அரசாங்கத்தின் நெருக்கடி நிலைமைகள் புலப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜந்த கருணாதிலக தெரிவித்தார்.
முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ஒன்று கூறினால் தற்போதைய எரிசக்தி அமைச்சர் அதற்கு எதிர்மாறாக கூறுகிறார். இதன் மூலமாக அரசாங்கத்தின் நெருக்கடி நிலைமைகள் புலப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜந்த கருணாதிலக தெரிவித்தார்.
Labels:
இலங்கை செய்திகள்
அ.இ.மு.கா.வின் கடிதத்தில் மு.கா. கையெழுத்திட முடியாது: ஹக்கீம்!
இந்நிலையில் இக் கடிதத்தில் மு.கா. பாராளுமன்ற
உறுப்பினர்கள் கையெழுத்திட முடியாது என அமைச்சர் ஹக்கீம் விடிவெள்ளியிடம்
தெரிவித்தார்.
Labels:
இலங்கை செய்திகள்
கல்முனை மாநகர சபை அமர்வை ஆளும் மு.கா. உறுப்பினர்கள் அறுவர் பகிஷ்கரிப்பு
கல்முனை மாநகர சபையின் இன்றைய அமர்வை பிரதி முதல்வர் சட்டத்தரணி நிசாம்
காரியப்பர் உட்பட ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆறு பேர்
பகிஷ்கரிப்பு செய்துள்ளனர்.
முதல்வர் சிராஸ் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி
இடம்பெறுகின்ற கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வை பிரதி முதல்வர்
சட்டத்தரணி நிசாம் காரியப்பர், ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான
உமர் அலி, ஏ.எம்.பரக்கத்துல்லாஹ், ஏ.எம்.றகீப், ஏ.எல்.எம்.முஸ்தபா,
ஏ.ஏ.பஷீர் ஆகியோரே பகிஷ்கரிப்பு செய்துள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற ஆளும் தரப்பு குழுக் கூட்டத்தின் போது உறுப்பினர்
உமர் அலியை முதல்வர் சிராஸ் தரக்குறைவான வார்த்தைகளால் ஏசி
அச்சுறுத்தியதைக் கண்டித்தே தாம் இப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக கல்முனை
மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் முதல்வரிடம்
விளக்கம் கேட்டபோதே என் மீது சீறிப் பாய்ந்து தகாத வார்த்தைகளால் முதல்வர்
தன்னை அச்சுறுத்தினார் என்று ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உமர் அலி
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
Labels:
இலங்கை செய்திகள்
கொழும்பில் சுமார் 300 உணவகங்களுக்கு பூட்டு
கொழும்பு நகர சபையின் மக்கள் சுகாதார
பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த உணவகங்கள் அடிப்படை சுகாதர
வசதிகளையேனும் கொண்டிராமல் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்,
இவற்றுள்பல, விற்பனை சான்றிதழ்களையும் கொண்டிருக்கவில்லை என்றும்
தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த உணவகங்கள் தொடர்பான
ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக கொழும்பு நகர
சபையின் பொது மக்கள் சுகாதார பிரிவு தலைவர் பிரதீப் காரியவசம்
தெரிவித்துள்ளார் .
Labels:
இலங்கை செய்திகள்
பொது பல சேனாவுக்கு உதவி செய்யவில்லை : நோர்வே அறிக்கை
பொது பல சேனா என்ற அமைப்புக்கு தமது நாடு நிதி மற்றும் எந்தவொரு
உதவியினையும் ஒரு போதும் செய்யவில்லை என நோர்வே தெரிவித்துள்ளது. இது
தொடர்பில் நோர்வே அரசின் செய்தியை இலங்கைக்கான நோர்வே தூதரகம்
வெளியிட்டுள்ளது.
அதில் இலங்கை உட்பட எந்தவொரு நாட்டிலும் இன மத பேதங்களை ஏற்படுத்தவோ
அல்லது அமைதியினை சீர்குலைக்கும் விதமாகவோ நோர்வே எந்தவொரு
பங்களிப்பினையும் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தடன்
முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு நிகழ்ச்சி நிரலும் தன்னிடம் கிடையாது
எனவும் நோர்வே சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் பொது பல சேனாவின் உறுப்பினர்களுக்கு தமது நாடு சில வருடங்களுக்கு
முன்னர் அழைப்பு விடுத்தமையையும் அவர்கள் அங்கு வந்தமையையும் குறித்த
தூதரகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த பிக்குகள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவானது
பேச்சுவாரத்தைக்காகவே அழைக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு நோர்வே எவ்வகையிலும்
நிதி உதவி வழங்கவில்லை எனவும் தூதரகத்தின் அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Labels:
இலங்கை செய்திகள்
அஹதிய்யா பாடசாலைகள் சிறந்த முறையில் காணப்படுகின்றன - சரத் ஏக்கநாயக்க

வாழ்க்கையில் உயர் நிலையை அடைவதற்கு கல்வி அவசியமாகும். எவரும் நினைக்கக்
கூடாது கல்வி இல்லாவிட்டாலும் தொடர்ந்து பணம் இருக்கும் என்று. பணம்
என்பது நிரந்தரமல்ல அந்த வகையில் கல்வி என்பது மிகவும் பெறுமதி மிக்கது.
சகல பிள்ளைகளுக்கு சிறந்த வல்வியை நாம் வழங்குதல் வேண்டும். அந்தக்
கல்வியுடன் அன்மீகப் பண்பும் இருத்தல் வேண்டும். ஆன்மீகப் பண்பு இல்லாத
கல்வியில் எந்தவிதமான பயனும் இல்லை என்று மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத்
ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கல்ஹின்னை பட்டகொல்லாதெனிய முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 35 வருட
நிகழ்வுடன் பரிசளிப்பு விழா மற்று மகுடம் சஞ்சிகை நூல் வெளியீட்டு விழாவும்
இன்று 28-04-02013 பாடசாலை மண்டபத்தில் அதிபர் ஏ. எஸ். எம். இக்ராம்
தலைமையில் நடைபெற்றது.
Labels:
இலங்கை செய்திகள்
Sunday, April 28
பொதுபல சேனாவிற்கு ஆதரவாக அம்பாறையில் துண்டுப்பிரசுரம்
பொது பல சேனாவை ஆதரிப்பதன் மூலமே
அம்பாறை மாவட்ட தமிழர்கள் தங்களின் இருப்பை தக்கவைக்க முடியும் எனக்
குறிப்பிடும் துண்டுப்பிரசுரம் ஒன்று அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. 'அம்பாறை மாவட்ட நமக்காக
நாம்' எனும் அமைப்பின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இத்துண்டுப்
பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கல்முனையில் தமிழர்களுக்காக
இருக்கின்ற ஆதார வைத்தியசாலை,
கல்முனை தமிழ்ப்பிரிவு
பிரதேச செயலகம் போன்றவற்றை திட்டமிட்டு சதி செய்து அஷ்ரப் வைத்தியசாலையுடனும்
முஸ்லிம் பிரிவு பிரதேச செயலகத்துடனும் இணைப்பதற்கு முஸ்லிம்
அரசியல்வாதிகள் மற்றும் இஸ்லாமிய கல்விமான்கள் எடுத்துவரும் நடவடிக்கையானது
உண்மையிலேயே எமக்கு வேதனையைத் தருகிறது.
Labels:
இலங்கை செய்திகள்
கல்முனை பகுதியிலிருந்து அஸ்வருக்கு கொலை அச்சுறுத்தல்: நோன்புப் பெருநாள் வரை காலக்கெடு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற
உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், தனக்கு பல தடவைகள் தொலைபேசி மூலம் கொலை
அச்சுறுத்தல்விடுக்கப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இவற்றில் அதிகமான கொலை அச்சுறுத்தல்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை
பகுதியிலிருந்தே விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும்
தான் செயற்படுவதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இவ்வாறு கொலை
அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த வருடம் ரமழான்
பெருநாள் வரை அச்சுறுத்தல்காரர்கள் காலக்கெடு விதித்துள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.
"எனக்கு இறுதியாக ஏப்ரல் 19 அன்று வந்த தொலைபேசி அழைப்பு மூலம்
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. எதிர்வரும் ரமழானுக்குள் உன் கதை முடியும்
என மறுமுனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இது தொடர்பில் நான்
பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். எனது கையடக்கத் தொலைபேசிக்கும்
வீட்டிலுள்ள நிலையான தொலைபேசிக்குமே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் அழைப்புகள்
வந்தன" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Labels:
இலங்கை செய்திகள்
அஸாத் சாலி 4 ஆம் மாடிக்கு அழைப்பு
இது தொடர்பாக அஸாத் சாலி வெளியிட்டுள்ள ஊடக
அறிக்கையில் “எனது இல்லத்தில் நேற்று மாலை இரகசிய பொலிஸார் தேடுதல்
மேற்கொண்டனர். இதன்போது என்னை விசாரித்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில்
நான் வீட்டில் இருக்கவில்லை. எனது மனைவியே பொலிஸாரின் கேள்விகளுக்கு பதில்
அளித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தின் நான்காம் மாடியிலுள்ள
லசன்த ரத்னாயக்க என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டரை சந்திக்குமாறு எழுத்து மூலமான
ஒரு குறிப்பை வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக
வழக்குத் தொடரப்பட உள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர்
ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே
ஞானசார தேரரின் சில நடவடிக்கைகள் குறித்தும் நீதிமன்றில் முறைப்பாடு
செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். என்பது சுட்டிக் காட்டத் தக்கது
Labels:
இலங்கை செய்திகள்
முஸ்லிம்களை தலைமை தாங்க நான் தயார் : ரணில்
இந்நாட்டின் முஸ்லிம்
மக்களுக்காக தான் முன்னிற்பதாக எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க
தெரிவித்துள்ளார். மான்னாரில் ஐ.தே.க.யின் செயற்பாட்டாளர்களை சந்தித்து
கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்ததாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்தது.
அங்கு அவர் மேலும்
தெரிவித்துள்ளதாவது, ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்கள்
முஸ்லிம்களின் உரிமைகளை தட்டில் வைத்து ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளனர்.
இந்நாட்டில் தமிழர்கள் தொடர்பில்
பாராளுமன்றத்தில் எழுந்து நின்று கதைக்க சம்பந்தன் இருக்கிறார். எனினும்
முஸ்லிம்கள் தொடர்பில் கதைக்க யாரும் இல்லை. எனவே நான் அவர்களுக்காக குரல்
கொடுப்பேன்.
அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் பெருமளவில்
இருந்த போதிலும் அவர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதில்லை
எனவும் இதன் பொது அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
இலங்கை செய்திகள்
ஆஸாத் சாலி தொடர்பில் அரச சார்பு ITN ஊடக வலையமைப்பு குற்றச்சாட்டு
இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆஸாத் சாலி மேற்கொண்ட சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தியாவின் ஜூனியர் விகடன் தமிழ்
இணையத்தளத்துக்கு ஆஸாத் சாலி வழங்கிய செவ்வி பயங்கரவாதத்துக்கு தலைமை
தாங்குவது பற்றி வெளிப்படுத்தியுள்ளார் . அரசுக்கு எதிரான தமிழ்
பயங்கரவாதத்தை போல முஸ்லிம்களும் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டம் ஒன்றை
முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார் . தற்போதைய
நிலையில் மக்கள் ஆயுதங்களை கையிலெடுக்க வேண்டிய தேவை மாத்திரமே உள்ளது.
அதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட
இவ்வாறான இஸ்லாமிய ஆயுத குழுவுக்கு நானும் ஆதரவு வழங்குவேன் என அவர்
தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை செய்திகள்
‘மச்சான் ஞானசார’ என்ற கட்டுரை எழுதியவர் 4ஆம் மாடிக்கு அழைப்பு !
அண்மையில் ‘மச்சான் ஞானசார’ என்ற
தலைப்பில் பிரபல பெப்பராசியா சிங்கள சிஞ்சிகையில் அதன் ஆசிரியர் சோபால
அமரசிங்க கட்டுரை ஒன்றில் ஞானசார போன்ற பெளத்த தேரர்கள் இனவாதத்தையும்
மதவாதத்தையும் பரப்புவதை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு ஆக்கத்தை
பதிவு செய்திருந்தார். அதை தொடர்ந்து பொதுபல சேனா குறித்த கட்டுரை
தம்மையும் பௌத்தத்தையும் அவமானப்படுத்துவதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப் படும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளிடம் இது தொடர்பாக
முறையிடப் பட்டுள்ளது என்றும் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பெப்பராசியா சிஞ்சிகையின்
ஆசிரியர் சோபால அமரசிங்க பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் என்று
தெரிவித்தவர்களால் தான் விசாரிக்கப்பட்டதாக ஏற்கனவே தெரிவித்திருந்தமையும்
குறிப்பிடத்தக்கது .
Labels:
இலங்கை செய்திகள்,
சுவாரஷ்யமானவை
மும்மொழி பெயர் பலகையை காட்சிப்படுத்தாத பஸ்களை சுற்றிவளைக்க நடவடிக்கை
தேசிய கருமமொழி ஆணைக்குழுவின் கொள்கைகளுக்கு அமைய பஸ் பெயர் பலகைகளை தயாரிப்பதற்காக வழங்கப்பட்ட கால எல்லை நிறைவடைந்துள்ளது.
பெயர் பலகைகளை மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தாத பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய கருமமொழி ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக பொலிஸாரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அரச கருமமொழி ஆணைக்குழுவின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுகின்ற பஸ்கள் மே மாதம் 7ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சுற்றிவளைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
பெயர் பலகைகளை மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தாத பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய கருமமொழி ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக பொலிஸாரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அரச கருமமொழி ஆணைக்குழுவின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுகின்ற பஸ்கள் மே மாதம் 7ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சுற்றிவளைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
Labels:
இலங்கை செய்திகள்
அஸாத் சாலியை பொலிஸில் ஆஜராகுமாறு உத்தரவு
பொலிஸ் தலைமையகத்தின் நான்காம் மாடியிலுள்ள லசன்த ரத்னாயக்க என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டரை சந்திக்குமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அஸாத் சாலி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது,
"எனது இல்லம் நேற்று சனிக்கிழமை மாலை இரகசிய பொலிஸார் தேடுதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது என்னை விசாரித்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் நான் வீட்டில் இருக்கவில்லை. எனது மனைவியே பொலிஸாரின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தின் நான்காம் மாடியிலுள்ள லசன்த ரத்னாயக்க என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டரை சந்திக்குமாறு எழுத்து மூலமான ஒரு குறிப்பை வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர்" என்றார்.இதேவேளை, அஸாத் சாலி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
இலங்கை செய்திகள்
நாம் உட்கொள்ளும் பால்மா எவ்வளவு தூய்மையானது?
2009 ஆம்
ஆண்டு பெறப்பட்ட பரிசோதனை அறிக்கைகளின் பிரகாரம் “மவ்பிம லங்கா பௌண்டேஷன்”
அமைப்பு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதி மனறத்தில் நெஸ்லே மற்றும் போண்டேரா ஆகிய
கம்பனிகள் தமது உற்பத்தியில் உள்ள இந்த குறைபாடுகளை மறைக்கின்றன என்று ஒரு
வழக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு
பிரதிவாதிகள் அனைவரும் அழைக்கப்பட்டனர். இந்த பிரதிவாதிகள் ஒரு உடன்பாடு
மூலம் இந்த வழக்குக்கு தீர்வு காண முனைந்தனர். அத்துடன் பிரேரணைகள் மூலம்
இந்த விடயத்தை மவ்பிம லங்கா பௌண்டேஷன் பொது மக்களுக்கு இந்த விடயத்தை
அறிவிப்பதில் இருந்து தடுக்க முற்பட்டனர். அத்துடன் மவ்பிம அமைப்புக்கு
எதிராக நான்கு வெவ்வேறான வழக்குகளும் இந்த நிறுவனங்களால் தொடரப்பட்டன.
Labels:
இலங்கை செய்திகள்
முஸ்லிம் சேவையை எங்கு கொண்டு செல்கிறீர்கள்?
முஸ்லிம் சேவை தேசிய சேவையின் ஒரு
பிரிவாகவே செயற்பட்டது. தேசிய சேவை போன்ற எதுவித விளம்பர ஒலிபரப்புகளும்
இன்றி அரச பணத்தில் இயங்கியது. வானொலி தேசிய சேவை, வர்த்தக சேவை என்று
இரண்டாக இருந்தன. வர்த்தக விளம்பரங்கள் வர்த்தக சேவையிலே இடம்பெறும். தேசிய
சேவையில் விளம்பரங்கள் இல்லை. அறிவிப்பாளர்கள் கூட இந்த இரு சேவைகளிலும்
வெவ்வேறு தனித்துவங்களுடன் செயற்பட்டனர்.
இதன்படி தேசிய சேவை அறிவிப்பாளர்களாக
செயற்படும்போது ஒரு தனித்துவத்தை பின்பற்றினார்கள். அதை ஒரு கௌரவமாக
மதித்து கௌரவத்துடன் செயல்பட்டனர். இங்கு வர்த்தக விளம்பரம் போன்ற
வேகங்களோ, தமிழ் கொலைகளோ வேற்று மொழி கலப்புகளோ இருக்கவில்லை சிறந்த தனித்
தமிழாக சிறந்த உச்சரிப்பாக இருந்தது. எப்.எம். அலைவரிசைகள் போன்று ஆங்கிலம்
நிறைந்த இலக்கணம் பிழையான உச்சரிப்பும் பிழையான தமிழாக இருக்கவில்லை.
Labels:
இலங்கை செய்திகள்
பாகிஸ்தான் இறக்குமதி உருளைக்கிழங்கு கொள்கலனில் கருக்கலைப்பு மருந்து!
April 27, 2013 02:06 pm
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உருளைகிழங்கு
கொள்கலனில் இருந்து கருக்கலைப்புக்காக பயன்படுத்தப்படும் 300 லட்சம் ரூபா
பெறுமதியான 30,000 மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மருந்து குப்பிகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரஜை ஒருவர் பாகிஸ்தானில் இருந்து இந்த மருந்து குப்பிகளை கொண்டுவந்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்.
உருளைக்கிழங்கு இறக்குமதி செய்த கொள்கலனை இன்று (27) சோதித்த போதே இந்த மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூன்று கொள்கலன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் ஒன்றில் 15 பொதிகளில் காணப்பட்ட கருக்கலைப்பு மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மருந்து குப்பிகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரஜை ஒருவர் பாகிஸ்தானில் இருந்து இந்த மருந்து குப்பிகளை கொண்டுவந்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்.
உருளைக்கிழங்கு இறக்குமதி செய்த கொள்கலனை இன்று (27) சோதித்த போதே இந்த மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூன்று கொள்கலன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் ஒன்றில் 15 பொதிகளில் காணப்பட்ட கருக்கலைப்பு மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Labels:
இலங்கை செய்திகள்
அரசியல் பயணத்தை தொடர்வேன்: துமிந்த

தனது உடல்நிலை தனக்கு ஒரு பிரச்சினை இல்லை
என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கொலன்னாவை
ஆசனத்தை பொறுப்பேற்று தனது அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்கப் போவதாகத்
தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்
ஜனாதிபதி தொழிற்சங்கத்தின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின்
படுகொலை சந்தேகநபரான துமிந்த சில்வா எம்.பி, கொழும்பு நவலோகா
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
Labels:
இலங்கை செய்திகள்
ஜெய்லானியில் கட்டடங்கள் அகற்றப்படுவது குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது
இதுதொடர்பாக அவர் நமணிக்கு கருத்து
தெரிவிக்கும்போது, நேற்று வெள்ளிக்கிழமை கூரகல பகுதியிலுள்ள முஸ்லிம்
கட்டடங்களை அகற்றுவதற்காக அப்பகுதிக்கு சிவில் பாதுகாப்பு படையினர்
அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்தச் செய்தி
உண்மைக்குப் புறம்பானது.
Labels:
இலங்கை செய்திகள்
ரஷ்யாவில் பள்ளிவாசலுக்கு வந்த 140 பேர் கைது
இந்தநிலையில் நேற்று ரஷ்யாவின் மாஸ்கோ
நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வந்த இஸ்லாமியர்களில் 140 பேரை தீவிர
செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கருதி ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும், பாதுகாப்பு
அதிகாரிகளும், கைது செய்துள்ளனர்.
இவர்களில் 30 பேர், தங்கள் நாடுகளின்
பெயர்களைக் குறிப்பிடாமல் இங்கு வந்துள்ளவர்கள் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டன் சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்குள் இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
பாஸ்டன் குண்டுவெடிப்பில்
ஈடுபட்டதாகக் கருதப்படும் சகோதரர்களின் தாயார் சுபைதா, அமெரிக்க
புலனாய்வுத்துறை அதிகாரிகளால்,
18 மாதங்களுக்கு முன்னால் குறிக்கப்பட்டவர்களின்
வரிசையில் இடம்பெற்றிருந்ததாகவும் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவருவதால்
தகவல்கள் வெளியிடப்படக்கூடாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆயினும், அவர்களுடைய தாயார்
இதனை மறுத்துள்ளார். ரஷ்யக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மீது அடுத்தகட்ட
நடவடிக்கை குறித்து குறிப்பிட்ட மாவட்ட அலுவலகத்தில் இருந்து பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Labels:
இஸ்லாமிய உலகம்,
உலக செய்திகள்
Subscribe to:
Posts (Atom)