Tuesday, July 16

இடைநிறுத்திய இரண்டு உறுப்பினர்களையும் மு.கா. மீண்டும் சேர்த்துக்கொண்டது

slmcஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு முரணாக வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச்சட்ட விடயத்தில் வாக்களித்தார்கள் என்ற காரணத்தினால் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும், அதனூடாக அவர்கள் வகித்த பதவிகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா, ஆப்தீன் யெஹியா ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் அதியுயர்பீட கூட்டத்தில் அறிவித்ததாக செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
இந்த முடிவை அதற்கு ஒருநாளைக்கு முன்னதாகவே தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேற்கொண்டிருந்ததாகவும், சம்பந்தப்பட்ட மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் பிரஸ்தாப வாக்களிப்பு நடைபெற்ற பதற்றமான சூழ்நிலை, அவர்கள்மீது பிரயோகிக்கப்பட்ட பலவந்தம் என்பவற்றினாலேயே அவ்வாறு கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாற்றமாக அவர்கள் நடந்துகொள்ள நேர்ந்துவிட்டதாக விசாரணையின் முடிவில் தீர்மானிக்கப்பட்டதாலேயே அவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் முழு அதியுயர் பீடமும், விசாரணை குழுவாக செயற்பட்டதாகவும் ஹஸன் அலி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்து ரிஸ்வி ஜவஹர்ஷா, ஆப்தீன் யெஹியா இருவரும் எதிர்வரும் வடமேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment