Tuesday, July 16

மஹியங்கனையில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு அச்சுறுத்தல்; பேரணிக்கும் ஏற்பாடு!


BBSதெஹியதகண்டி முதல் மஹியங்கனை வரை ஊர்வலமொன்றுக்கும் பொதுக் கூட்டமொன்றுக்கும் பொதுபல சேனா அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 11 ஆம் திகதி மஹியங்கனை பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் அந்த பள்ளிவாசலில் பன்றியின் இரத்தம் ஓட்டப்பட்டமை, பள்ளிவாசலில் தொழுகை நடாத்தக் கூடாது என விடுக்கப்பட்ட எச்சரிக்கை, அதனையடுத்து வெள்ளக்கழமை ஜும்மா தொழுகையினை நடாத்துவதில் ஏற்பட்ட தயக்கம் போன்ற நிலவரங்களுக்கிடையே பொதுபல சேனாவின் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
மஹியங்கனையின் வர்த்தகம் செய்யும் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக பொதுபல சேனா பிரச்சாரம் செய்து வருகிறது. அவர்கள் ஊர்வலம் நடாத்த திட்டமிட்டுள்ளார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment