Wednesday, June 26

அனுராதபுரத்தில் பிக்கு மாணவனை கடத்தி கற்பழிப்பு!

பிக்கு மாணவன் ஒருவர் அனுராதபுரத்தில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டு உள்ளார். பொலிஸார் குற்றவாளியை தேடி வருகின்றனர். குற்றம் புரிந்தவர் ஒரு சிற்றூழியர் என்று கூறப்படுகின்றது. பிக்கு மாணவன் அனுராதபுரத்த்தில் உள்ள பௌத்த நிலையத்தில் தரம் -1 இல் படித்து வந்திருக்கின்றார்.

பௌத்த நிலையத்தை சேர்ந்தவர்களும், பிக்கு மாணவனின் பெற்றோரும் வழங்கிய முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போதே பிக்கு மாணவன் கடத்தப்பட்டு, மல்வத்து ஓயாவை அண்டிய காட்டுப் பகுதிக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டு, பல தடவைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார் என்று கண்டு பிடித்தனர்.
பிக்கு மாணவனின் உடுப்பை களைந்து சாதாரண உடையை அணிவித்து அனுராதபுரத்துக்கு வெளியில் துஷ்பிரயோக நபர் அழைத்து சென்று இருக்கின்றார்.

பிக்கு மாணவன் கொழும்பு பஸ்ஸில் அனுராதபுரம் வந்தபோது பொலிஸார் மீட்டார்கள். அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
மேலதிக புலனாய்வுகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment