Wednesday, June 26

சிங்கள ராவய அமைப்பின் பாதயாத்திரை கொழும்பை வந்தடைந்தது

u


பெளத்த கடுபோக்கு  சிங்கள ராவய  அமைப்பின் பாதயாத்திரை கொழும்பை வந்தடைந்துள்ளது. நாட்டில்   மாடு அறுப்பதைத் தடை செய்ய கோரியும் மத மாற்றப்படுவதை  தடுக்க  கோரியும்    கடந்த 13 ஆம் திகதி கதிர்காமத்திலிருந்து புறப்பட்ட பாதயாத்திரை இன்று  அலரி மாளிகை அன்மைதுள்ளது  இன்று   புதன்கிழமை 12.00 மணியளவில் பம்பலபிட்டியை வந்தடைந்தது .
இவர்கள்  ஜனாதிபதியின் அலரி மாளிகையை நோக்கிச் செல்ல முற்பட்டபோது கொள்ளுப்பிட்டிச் பகுதியில்   பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பேரணியாக வந்தவர்கள் தடுக்கப்பட்டதுடன் அவர்களின் தலைவர்கள் வான் ஒன்றில் அதிகாரிகளினால் அலறி மாளிகை நோக்கி அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் ஜானாதிபதியிடம் மகஜர் ஒன்றையும் அதற்கு ஆதரவாக கையெழுத்துகளையும் கையளிக்கவுள்ளனர்.
u

No comments:

Post a Comment