Wednesday, June 26

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க சில அமைச்சர்களை தூண்டி விடுகிறார்

wimal-weerawansa 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தற்போதைய அரசையும் இரண்டாக பிரிப்பதற்கும் 13வது திருத்தத்தை துரும்பாகக் கொண்டு அரசில் உள்ள சில அமைச்சர்களை தூண்டிவிடுகின்றார் என அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.ஸ்ரீ.ல.சு. கட்சியை இரண்டாகப் பிரித்தது பின் சந்திரிகாவின் மகன் விமுக்தியைக் கொண்டு அரசியல் நடாத்துவதற்காக அவர் முயல்கின்றார் என அமைச்சர் விமல் வீரவன்ச இன்று அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளாரே கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கை இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்திடும் விடயத்தில் எதிராக இருந்தவர்கள் தற்பொழுது அதற்கு ஆதரவாக உள்ளார்கள். ராஜித, ரெஜினோல்ட் குரே போன்றோர்கள் சந்திரிகாவின் கணவரின் கட்சியான மகாஜன கட்சியில் இருந்தவர்கள். அவர்கள் அன்றும் ஆதரவாக இருந்தார்கள் இன்றும் ஆதரவாகப் பேசுகின்றனர்.

ஆனால் செப்டம்பரில் தமிழ்த் தேசிய முன்னணியிக்கு வடக்கு மாகாணசபை ஆட்சி செல்வதற்கு முன் 13வது திருத்தத்தில் பொலிஸ் காணி அகற்ற வேண்டும் அந்த நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. வடக்கில் எமது கட்சி போட்டியிடுவதில்லை. இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தில் முதலில் மீறியது இந்தியாவே ஒப்பந்தம் கைச்சாத்திட்டு விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே வைப்பார்கள் என்று சொல்லி இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்திட்டது.
ஒப்பந்தம் கைச்சாத்திட்டு 5 நாட்கள் செல்லவில்லை, விடுதலைப்புலிகள் ஆயுதத்தை வைக்கவில்லை. இதனை மீறியது இந்தியாவே. ஊடகவியலாளர் கேள்வி – ஐ.தே.கட்சி 13வது திருத்தத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ள ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளார்களே?  ஐ.தே.கட்சி எதிர்காலத்தில் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசியல் செய்வதற்காகவே உள்ளனர். அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக ஐ.தே.கட்சி செயல்படுகின்றது.
ஊடகவியலாளர் – கேள்வி இந்தியா 13வது திருத்தத்தினை மேற்கொள்ளக்கூடாது என இலங்கை அரசுக்கு தெரிவித்தால் உங்களது நிலைப்பாடு என்ன? இது இந்தியாவின் லோக சபை இல்லை இலங்கைப் பாராளுமன்றம். ஊடகவியளாளர் கேள்வி வாசுதேவ நாணயக்கார 13ல் எவ்வித சொல்கின்றாரே? வாசுதேவ நாணயக்கார போன்றோர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். அவர்கள் யுத்தம் செய்யாமல் சமாதானம் செய்யச் சொன்னவர்கள். வட கிழக்கை இணைத்து சுயாட்சி முறை வழங்கச் சொன்னவர்தான் வாசுதேவ நாணயக்கார போன்றோர்கள்.
ஆனால் ஐனாதிபதி தற்போது உள்ள ஆட்சியில் உள்ள சகல கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு இத் திருத்தத்தை மேற்கொள்ளவே முயற்சிப்பதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

No comments:

Post a Comment