அனுராதபுரத்தில் இடம்பெற்ற பாரிய மனித
படுகொலைச் சம்பவம் குறித்து எந்தவொரு மனித உரிமை அமைப்பும் குரல்
கொடுக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 28
ஆண்டுகளுக்கு முன்னதாக 146 அப்பாவிகள் ஸ்ரீமஹாபோதி விஹாரைப் பகுதியில்
மிகக் கொடூரமான முறையில் பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டதாகக்
குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படுகொலைச் சம்பவம் குறித்து
எந்தவொரு அமைப்பும் குரல் எழுப்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் உள்ளுராட்சி மன்றப் பேரவை அமர்வுகளின் பிரதம உரையாற்றிய
போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உகண்டாவின் தலைநகர் கம்பலாவில் இந்த
அமர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment