பெளத்த பிக்குகளை எதிர்ப்பது என்
நோக்கமல்ல, ஆனால் பொது பல சேனாவுக்குள் இருந்து இயங்கும் நோர்வே முகவரான
திலன்த தனக்கும் நோர்வேக்கும் சம்பந்தமில்லையென நிரூபிப்பாரா என கேள்வி
கேட்டுள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச.
தமது அமைப்பு நோர்வ நிதியிலோ அல்லது
சர்வதேச அரச சார்பற்ற நிறுவன நிதியிலோ இயங்குகிறது என அமைச்சரால் நிரூபிக்க
முடியுமா என கடந்த திங்கள் கிழமை பொது பல சேனா செயலாளர் கலகொட அத்தே
ஞானசார தேரர் கேட்டிருந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வீரவன்ச, இந்தக்
கேள்வியை அவர்களது அமைப்பிற்குள் இருந்து இயங்கும் நோர்வே முகவரான திலன்த
விதானகேயிடம் முதலில் கேட்டுப் பார்க்கட்டும் என தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment