Thursday, May 16

மகிந்த ராஜபக்ச குழப்பத்தில் உள்ளார் - சிறிதுங்க ஜயசூரிய


வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதா அல்லது அதனை நடத்தாமல் விடுவதா என்ற குழப்ப நிலையில் ஜனாதிபதி உள்ளார் என தேசிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசாங்கம் உள்ளது. இதற்கான உறுதிமொழியை எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள அரச தலைவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் சகபாடிகளான விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க போன்றோர் வடக்கு தேர்தலை நடத்த வேண்டாம் என  ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதா இல்லையா என்ற குழப்ப நிலையில் உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment