Monday, May 13

அரசிலிருந்து விலகப் போவதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் நாடகம்: பைசர்

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திலுள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு நாடகமாடுகின்றனர் என பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அவர்கள் இப்படியே கூறிக் கொண்டிருப்பதனை விட்டு விட்டு விலகுவதாயின் விலகிச் சென்று விட வேண்டும். தெருநாய் தனது வாலை ஆட்டும் திசையில் போவதில்லை. அதுபோன்றே சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று அரசாங்கத்தை விட்டு விலகப் போகிறோம் என கூறிக் கொண்டு நாடகமாடுகின்றனர்.
 நாங்கள் அரசாங்கத்தை விட்டு விலகப் போகிறோம் என அரசாங்கத்துடன் உள்ள சில முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அரசின் அனைத்து வரப்பிரசாதங்களையும் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டு ஒட்டிக் கொண்டே உள்ளனர்.
இவ்வாறானவர்கள், தங்களது கட்சியின் கௌரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு அரசுடன் இருக்க வேண்டும் அல்லது அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment