Monday, May 13

மின்சாரக் கட்டண அதிகரிப்பு பாதையாத்திரைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மு. கா விடம் கோரிக்கை


 
 
 
 
 
 
 
 
 
 
 
மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் தொழிற்சங்கத்தினர் மற்றும் சுயாதீன அமைப்புகளின் உறுப்பினர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி பிற்பகல் கொழும்பில் முன்னெடுப்பதற்கு ஏற்பாடு செய்துள்ள பாதை யாத்திரைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவினர் திங்கள் கிழமை (13) முற்பகல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம், செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரீ. ஹஸன் அலி உட்பட முக்கியஸ்தர்கள் சிலரை  கட்சியின் 'தாருஸ்ஸலாம்'  தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். 
மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்ச பீட கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டதாக இச் சந்திப்பின் போது கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். 
இக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஜோசப் ஸ்டாலின், அகில இலங்கை அரச முகாமைத்துவ உதவி அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் உதேனி திஸாநாயக்க, சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் சமன் ரத்னபிரிய, காப்புறுதி சேவை சங்கத்தின் ஆர்.எஸ்.  நந்தலால்  ஆகியோர் பங்குபற்றினர். 

No comments:

Post a Comment