Thursday, May 16

நோர்வேயிலுள்ள விடுதலைப் புலிகளுடன் பேசினோம்: மனம்திறந்தார் ஞானசார

jaanasaraநோர்வேயிலுள்ள விடுதலைப் புலிகளின் சிறந்த புலம்பெயர் பிரதிநிதிகளுடன் தமது அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாக பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; புலிகளுடன் நேரடி தொடர்பில்லாத, பிரிவினைவாதமில்லாத புலம்பெயர் தமிழர் குழுவுடன் பொதுபல சேனா பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்தது. அக்குழுவுடன் இணைந்து செயற்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் நிதிகளை நேரடியாக மக்களுக்கு வழங்கும் திட்டமும் எம்மிடமிருந்தது.
ஆனால், துரதிஷ்டவசமாக உண்மையான நாடுகடந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இத்திட்டத்தை எதிர்த்தனர். அத்துடன் அவர்களுடனான சந்திப்புகள் கைவிடப்பட்டதாக ஞானசார தேரர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment