Saturday, April 6

கோடிக்கணக்கில் நகை, பணம் கடத்த முயன்ற ஜப்பான் பிரஜை சுங்க அதிகாரிகளால் கைது

கோடிக்கணக்கில் நகை, பணம் கடத்த முயன்ற ஜப்பான் பிரஜை கைது 
 
 
ஒரு கோடியே 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள் என்பவற்றை நாட்டில் இருந்து கடத்த முயன்ற ஜப்பான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க அதிகாரிகள் குறித்த நபரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

இவரிடம் இருந்து பெறப்பட்ட வெளிநாட்டு நாணயத் தாள்களின் பெறுமதி 30 லட்சம் ரூபா என இதுவரை கணிப்பிடப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்க அதிகாரி லெஸ்லி காமினி தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment