Saturday, April 6

சா/த பரீட்சையில் தோல்வி: மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
சா/த பரீட்சையில் தோல்வி: மாணவி தூக்கிட்டு தற்கொலை!ஊரகஸ்மங்கந்திய பொலிஸ் பிரிவில் இதுருவலவத்தை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வெளியான க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறு தனக்கு தோல்வியை அளித்ததால் மனமுடைந்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அநுராத விக்ரமரத்ன எனப்படும் 16 வயது மாணவியே தற்கொலை செய்து கொண்டவராவார்.

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வட்டவளை - ரொசல்ல பகுதியில் நேற்று தந்தை ஒருவர் தனது மகன் சா/த பரீட்சையில் தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment