Saturday, July 23

கிளிநொச்சி மக்களின் வாக்களர் அட்டைகளை எவரோ பெற்றுச் செல்கின்றனர் - கபே

கிளிநொச்சி மக்களின் வாக்களர் அட்டைகளை எவரோ பெற்றுச் செல்கின்றனர் - கபே


July 23, 2011  09:08 am
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரதிபுரம் ராமநாதபுரம் மலையாளபுரம் வட்டக்கச்சி ஆகிய பிரதேசங்களில் உள்ளவர்களின் வாக்கட்டகளை சிலர் வந்து வாங்கிச்செல்வதாக தேர்தல் கண்காணிப்புக் குழுவான கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றதும் அவ்விடத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்றை அனுப்பியதாகவும் அவ்விடத்தில் இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறவில்லை எனவும் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment