Saturday, July 23

இந்தியாவிலிருந்து இலங்கை இராணுவ வீரர்கள் பயிற்சி இன்றி திருப்பம்

இந்தியாவிலிருந்து இலங்கை இராணுவ வீரர்கள் பயிற்சி இன்றி திருப்பம்


July 23, 2011  02:17 pm

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் இராணுவ கல்லூரியின் தமிழர் ஆதரவாளர் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அடுத்து இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இலங்கை இராணுவ வீரர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு பஸ் மூலம் செல்லும் இவர்கள் அங்கிருந்து இலங்கைக்கு செல்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஆதவுக்குழுக்கள் நேற்றைய தினம் இந்த பயிற்சி முகாமுக்கு எதிராக பாரியதொரு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment