Monday, July 1

முஸ்லிம் வைத்தியர்களை நிராகரியுங்கள் - ஞானசார தேரர் அழைப்பு

நாட்டின் அடுத்த சவால், இளம் தலைமுறையினரிடையே பிரபலமாகி வரும் கருத்தடை மாத்திரைகள் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த மாத்திரை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு தமது அமைப்பு பௌத்த சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்டுநாயக்கவில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் தற்போது அவர்களின் இனத்தை கட்டியெழுப்பி, வர்த்தகம் உட்பட, அனைத்து துறைகளிலும் மிகவும் சூட்சுமான முறையில் தமது விரிவுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஊடாக உலக இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு நாட்டை கொண்டு செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
முஸ்லிம் வர்த்தகத்தை பகிஷ்கரிக்குமாறும்  முஸ்லிம் மருத்துவர்களை நிராகரிக்குமாறும் ஞானசார தேரர் இதன் போது கேட்டுக்கொண்டுள்ளார்

No comments:

Post a Comment