Tuesday, July 16

பணத்தை உடலில் மறைத்து வெளிநாடு கொண்டு செல்ல முயன்றவர் எக்ஸ்ரே சோதனையில் சிக்கினார்

இரண்டு கோடியே 28 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வெளிநாட்டுப் பணத்தை உடலில் மறைத்து சிங்கப்பூருக்கு கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் நடத்தப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் பணம் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து சிங்கப்பூர் நோக்கி நேற்றிரவு 10.30 அளவில் பயணிக்கவிருந்த இலங்கையரிடம் இருந்தே இந்தப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
53 வயதான ஒருவரே இவ்வாறு சுவிஸ் பிராங் மற்றும் யூரோ போன்ற வெளிநாட்டுப் பணத்தை உடலில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றதாக சுங்கப் பிரிவு குறிப்பிட்டது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக விமான நிலைய சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி மேலும் கூறினார்.

No comments:

Post a Comment