Tuesday, July 2

கசினோ மன்னன் “பெக்கர்” திட்டம் நிறைவேறுகிறது?


அவுஸ்திரேலிய கசினோ மன்னன் பெக்கர் இலங்கையில் பாரிய கசினோ ஒன்றை திறக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து, அஸ்கிரிய பீடாதிபதி வரை தெருவுக்கு இறங்குவதக தெரிவித்திருந்த நிலையில் தற்போது மறைமுகமாக விடயங்கள் அரங்கேறி வருவதாக அறியமுடிகிறது.
ரேங்க் ஹோல்டிங்ஸ் எனும் உள்ளூர் பங்குதாரரையும் கொண்ட நிறுவனம் மூலம் இத்திட்டம் அரங்கேறப்போவதாக ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த ஆடம்பர கசினோ அரங்கம் 400 உல்லாச அறைகளுடன் கூடியதாகவும் நிர்மாணிக்கப்படவிருப்பதோடு இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டு 50 வருட குத்தகைக்கான ஆவணங்களும் கை மாறியுள்ளதோடு 12 வருட வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment