Tuesday, June 4

பிக்குவின் வாய்க்கு பிளாஸ்டரை ஒட்டிவிட்டு சந்திவட்டக்கற்கள் கொள்ளை

monk plasterஅநுராதபுரத்தில் கெபித்திக்கொல்லாவ பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் பெளத்த பிக்குவின் வாய்க்கு பிளாஸ்டரை ஒட்டிவிட்டு அங்குள்ள சந்திர வட்டக்கற்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குறித்த விகாரைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பௌத்த பிக்கு மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஆகிய இருவரின் வாய்களுக்கும் பிளாஸ்டரை ஒட்டிவிட்டு பெறுமதிவாய்ந்த ஐந்து சந்திரவட்டக்கற்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் இக்கொள்ளைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரைணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment