Tuesday, June 4

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர்கள் உருவாக்கிய உளவு விமானம்!

கொழும்பு: இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினால் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும், பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹனவும் இணைந்து இந்த ஆளில்லா உளவு விமானத்தை தயாரித்துள்ளனர். 200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக் கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அனுசரணையாளர்களின் உதவியுடன் விமானத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment