Wednesday, June 26

வீதியால் போன பிக்குவை பிரித் ஓதுமாறு கூறி கன்னத்தில் அறைந்த 3 பேர் கைது

 
புத்தளம், நவகத்தேகம - ரம்பகனயாகமே பௌத்த மத்தியஸ்தானத்தின் தலைமை பௌத்த பிக்குகவை தாக்கினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நவகத்தேகம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதியால் சென்ற பிக்குவிடம் பிரித் ஓதுமாறு குறித்த மூன்று சந்தேகநபர்களும் மதுபோதையில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வீதியில் பிரித் சொல்ல முடியாது என பௌத்த பிக்கு தெரிவித்துள்ளார்.
இதனால், போதையிலிருந்த சந்தேக நபர்கள் மதகுருவின் கண்ணத்தில் அறைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment