Sunday, May 5

அரசுடனான எதிர்காலம் குறித்து அடுத்த வாரம் மு. கா தீர்மானம்

அரசுடனான எதிர்கால செயற்பாடுகள் குறித்து எதிர்வரும் அடுத்த வாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமான முடிவு எடுக்க உள்ளது.
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மு. கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசி தீர்மானிப்பார்கள் என்று மு. காவின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
கடந்த வருடங்களாக கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன, இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், இவ்விடயத்தில் அரசுக்கு மு. கா உச்ச பட்ச அழுத்தத்தை கொடுக்கும் என்றும் இவர் கூறினார்.

1 comment:

  1. Ha Ha Ha comedy comedy ,,Dear SLMC guys ? we dont want your plans coz we have your plenty of plans but nothing happened.we just need the out put.we are not ready to be a fool anymore ...

    ReplyDelete