Tuesday, May 7

மாத்தளை மனித புதைக்குழிக்கு நீதி கேட்டு நாளை நீதிமன்றம் செல்கிறது ஜேவிபி




மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழியில் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து நாளை (08) மாலை மாத்தளை நீதவான் நீதிமன்றில் சத்திய வாக்கு மூல மனுவொன்றை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
காணாமல் போன தமது உறுப்பினர்களின் உறவினர்கள் இதில் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித புதைக்குழி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி அமைத்த குழு மேற்கொண்ட ஆய்வை அடுத்து இந்த நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment