Tuesday, May 21

அநுராதபுரம் பூங்காவில் அமர்ந்து சுகம் அனுபவித்த நூற்றுக்கணக்கான காதல் ஜோடிகள் கைது

அநுராதபுரம் மல்வத்து ஓயாவுக்கு அருகிலுள்ள பூங்காவில் காதல் சுகத்தை அனுபவித்துக்கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமான இளைஞர்,
யுவதிகளை அநுராதபுரம் பொலிஸார் சுற்றிவளைத்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.


கடந்த 18ஆம் திகதி மாலை ரிவர் பார்க் பூங்காவை அநுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் அங்கும் இங்கும் நின்றவாறே காதல் சுகம் அனுபவித்துக்கொண்டிருந்த 120 இளைஞர், யுவதிகள், சிறுவர்களை மகளிர் பிரிவின் கேட்போர் கூடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


இவ்வாறு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் யுவதிகள் 18-20 வயதுக்குட்பட்டவர்களாவர். பின்னர் இவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment