Tuesday, May 14

அசாத் சாலி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில்…?

hqdefault 









கொழும்பு, மாநகர சபை முன்னாள் பிரதி மேயரும் தமிழ், முஸ்லிம் கட்சியின் தலைவருமான அசாத் சாலி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று அசாத் சாலிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்டத்துக்குமிடையில் மிக இரகசியமான முறையில் இடம்பெற்றதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எட்டு நாட்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட அசாத் சாலி, பின்னர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டபோது அவரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் நேரில் சென்று பார்வையிட்டமை தெரிந்ததே.

No comments:

Post a Comment