Tuesday, May 14

உலமா கட்சி உறுப்பினர்கள் சம்மந்தமான தகவல்களை கல்முனை பொலிஸார் விசாரனை

Mubarak1இன்று காலை கல்முனை பொலிசின் பாதுகாப்பு பிரிவினர் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எமது கட்சியின் நிர்வாகிகள் பற்றி கேட்டனர் என உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏன் என்று நான் விசாரித்த போது மேலிடத்து உத்தரவு என கூறினர். கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர்களின் பெயர் பட்டியலை வழங்கினேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், என்னிடம் இவை பற்றி கேட்பதை விட தேர்தல் ஆணையாளரிடம் விசாரித்தால் முழு விபரங்களையும் தருவார் என்பதையும் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

இவை எல்லாம் ஏன் எதற்காக என்பதை பொலிசார் கூற மறுத்து விட்டனர் எனவும் அவர் வழங்கியுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment