Monday, May 13

இலத்திரனியல் “தேசிய” அடையாள அட்டை அறிமுகமாகப்போகின்றது !

இலங்கையில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தப்போவதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்பாரிய பணியை மேற்கொள்வதற்காக 800 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் அதேவேளை 331 விஷேட பணியகங்களும் உருவாக்கப்படப்போவதாகவும் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் R.M.S. சரத்குமார் அறிவித்துள்ளார்.
இலங்கையில் தினமும் 4000 ஆளடையாள அட்டைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment