Wednesday, May 8

முஸ்லிம்கள் மீதான தாக்குதலை புத்த பிக்குகள் நிறுத்த வேண்டும் - தலாய் லாமா

முஸ்லிம்கள் மீதான தாக்குதலை புத்த பிக்குகள் நிறுத்த வேண்டும் - தலாய் லாமா


May 8, 2013  03:03 pm
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை புத்த பிக்குகள் கைவிட வேண்டும் என திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார்.

மியான்மார் மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள வன்முறைகளுக்கு பௌத்தர்களும் புத்த பிக்குகளுமே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போது அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, நோபல் பரிசு பெற்ற புத்த மதத் மதத்தலைவர் தலாய் லாமா மெர்ரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் 15,000 பேருக்கு மத்தியில் நேற்றிரவு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மதத்தின் பெயரில் நடந்துள்ள இந்த வன்முறை, நினைத்து பார்க்க முடியாத வருத்தத்தை தருவதாகவும் புத்த மத்தினர் இந்த வன்முறையில் இணைத்து பேசப்படுவது மிகவும் துரதிருஷ்டவசமானதெனவும் அவர்கள் புத்தரின் அகிம்சை வழியை கடைபிடிக்க வேண்டும் எனவும் தலாய் லாமா கூறியுள்ளார்.

மேலும் உலக முழுமைக்கும் ஒரே மனித குலம் படைக்கும் பொறுப்பு இளைஞர்களிடத்தில் இருக்கிறது என்று தலாய் லாமா தெரிவித்தார்.

(அத தெரண - தமிழ்)

No comments:

Post a Comment