Wednesday, May 8

புதிய மாற்றத்துடனான மின்கட்டண அறவீடு இம்மாதம் 20ஆம் திகதிமுதல்

மேதினக் கூட் டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அறிவித்த  புதிய மாற்றத்துடனான மின்கட்டண அறவீடு இம்மாதம் 20ஆம் திகதிமுதல் அமுலுக்கு வருமென பொதுப் பயன் பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி ஜயதிஸ்ஸ.டி. கொஸ்தா தெரிவித்தார்.

முதல் 60 மின்அலகுகளைப் பயன் படுத்தும் பாவனையாளர்களின் மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்றும்- 90 அலகுகள் முதல் 95 அலகுகள் வரையான மின் பாவனையாளர்களுக்கு
நிவாரணக் கட்டணத்தில் சீராக்கல் வழங்கவும்- 180 அலகுகள் வரையான மின் பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்தார்.


இதற்கமைய ஜனாதிபதி இரண்டு வகையான நிவாரணங்களை அறிவித்துள்ளார் என்றும் ஆணைக் குழுவின் தலைவர் மேலும் குறிப் பிட்டார்.

ஜனாதிபதி  அறிவித்த நிவாரணத்துடனான புதிய மின்கட்டண அறவீட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருப்பதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment