Wednesday, May 8

அமைச்சர் றிஸாட் பதீயுதீன் அவர்களின் சம்மதத்தோடு சிங்கள குடியேற்றம்.



மன்னார் மாவட்டத்தில் அரசாங்கம் புதிய சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் சிங்களக் குடும்பங்களை அரசாங்கம் குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதன் அடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 1500 சிங்கள குடும்பங்களையும்,மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 1000 சிங்கள குடும்பங்களையும், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 1500 சிங்கள குடும்பங்களையும் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது அரசாங்கம் வகித்துள்ள புதிய திட்டங்களுக்கு அமைவாக 2 முஸ்ஸிம் கிராமக்களுக்கு இடையில் ஒரு சிங்கள கிராமத்தையும்,2 தமிழ் கிராமங்களுக்கு இடையில் ஒரு சிங்கள கிராமத்தையும் உறுவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் முஸ்ஸிம் மக்கள் ஒற்றுமையாக செயற்பட்டு குறித்த சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.இந்த குடியேற்றத்திற்கு அமைச்சர் றிஸாட் பதீயுதீன் அவர்களின் -சம்மதம் உள்ளதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment