மட்டக்களப்பில்
ஜும்ஆ தொழுகைக்காக மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் முஸ்லிம்களுக்கு
தலைகவசம் அணிய வேண்டும் என்ற கட்டாய சட்டத்தில் இருந்து விதி
விலக்களிக்கப்பட்டுள்ளது. நேற்று காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வீ. இந்திரன் இதனைத் அறிவித்துள்ளார்.
இதன்படி, மட்டக்களப்பு நகரிலுள்ள முஸ்லிம்
பிரதேசங்களில் நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரையில் ஜும்ஆ
தொழுகைகளுக்காக செல்லும் முஸ்லிம்கள் கட்டாயம் தலைகவசம் அணிய
வேண்டியதில்லை. ஆனால் இதை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என்றும் அவர்
தெரிவித்துள்ளார் .
சில மாதங்களுக்கு முன்னர் சின்ஹல ராவைய
என்ற பெளத்த தீவிரவாத அமைப்பு நாட்டில் பொலிசார் முஸ்லிம்கள் பள்ளிக்கு
செல்லும்போது தலைகவசம் இன்றி தொப்பியுடன் செல்வதற்கு அனுமதிகிரார்கள் அதை
ஏற்றுகொள்ள முடியாது பள்ளிக்கு தொப்பி அணிந்து மோட்டார் சைக்கிள்களில்
செல்லும் முஸ்லிம்களிடம் பொலிசார் தொப்பிவை கழட்டி விட்டு தலைகவசத்தை
அணிந்து செல்லுமாறு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தமை
சுட்டிக்காட்டத் தக்கது
No comments:
Post a Comment