Friday, May 17

சுங்கத்தால் சிங்கி இறால்கள் கைப்பற்றப்பட்டுள்ளன


வியட்நாமுக்கு வர்த்தகர் ஒருவரினால் ஏற்றுமதி செய்யப்படவிருந்த  உயிருடான சிங்கி இறால்களை  பண்டாரநாயக்க விமான நிலையத்திலுள்ள உயிர் பல்லினத்தன்மைப் பிரிவின் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

உயிருடனான 669 சிங்கி இறால்கள் 8 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் நீர்கொழும்பிலுள்ள சிங்கி  இறால் ஏற்றுமதிக் கம்பனியின் உரிமையாளராவார். 

பெரிய சிங்கி இறால்களை அனுமதி பெற்று ஏற்றுமதி செய்ய முடியுமெனினும், 6 சென்ரிமீற்றரிலும் கூடுதல் நீளமான சிங்கி இறால்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment