Tuesday, May 14

திருகோணமலையில் பாகிஸ்தான் யுத்தக் கப்பல்

Pakistan Navyபாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான சைஃப் என்னும் யுத்தக் கப்பல் நல்லெண்ண விஜயமாக இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதிவரை திருகோணமலை துறைமுகத்தில் இக்கப்பல் தரித்து நிற்கும். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பரஸ்பர நல்லுறவை பறைசாற்றுமுகமாகவும் கலாசார, ராஜதந்திர உறவினை பிரதிபலிக்குமுகமாகவும் இக்கப்பல் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் அறிவித்துள்ளது.
சைஃப் யுத்தக் கப்பலானது 123 மீற்றர் நீளங்கொண்ட மிகப்பெரிய அதி நவீன வசதிகளைக் கொண்ட கப்பலென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment